முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இனந்தெரியாத நபர்கள் சிலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

61 வயதுடைய பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version