இந்­தி­யா­வுடன் அண்­மையில் செய்து கொண்ட பாது­காப்பு ஒத்­து­ழைப்பு புரிந்­து­ணர்வு உடன்­பாடு, இலங்கை அர­சாங்­கத்­துக்கு பெரும் தலை­வ­லி­யாக மாறி­யி­ருக்­கி­றது.

அந்த உடன்­பாட்டின் உள்­ள­டக்­கத்தை வெளி­யி­டாமல், அர­சாங்கம் மறைத்து வைத்­தி­ருக்­கி­றது. இப்­போ­தைக்கு அது வெளி­யி­டப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த உடன்­பாட்டை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க வேண்டும் என, எதிர்க்­கட்­சிகள் தொடர்ச்­சி­யாக குரல் எழுப்பி வரு­கின்­றன.

பிராந்­திய அர­சியல் சூழலில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற திடீர் மாற்­றங்கள், அர­சாங்­கத்­திற்­கான எதிர்­பா­ராத நெருக்­க­டி­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

இந்த உடன்­பாடு கடந்த மாத தொடக்­கத்தில் கையெ­ழுத்­தி­டப்­பட்ட போது, இருந்த சூழல் கடந்த வாரத்தில் இருந்­தி­ருக்­க­வில்லை.

கடந்த மாத தொடக்­கத்தில் நிலைமை சுமூ­க­மா­ன­தாக இருந்­தது, பிராந்­திய அர­சி­யலில் கொந்­த­ளிப்பு இருக்­க­வில்லை.

ஆனால், காஷ்மீரின் பஹல்­காமில் 26 சுற்­றுலா பய­ணிகள் சுட்டுக் கொல்­லப்­பட்ட பின்னர், நிலைமை தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கி­றது.

இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் பெரும் போர் வெடிக்கக் கூடிய பதட்­ட­மான சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த தாக்­கு­த­லுக்கு பாகிஸ்­தானே காரணம் என இந்­தியா குற்­றம்­சாட்­டு­கி­றது. அதனை அடிப்­ப­டை­யாக வைத்து பாகிஸ்­தா­னுடன் உள்ள தொடர்­புகள் பல­வற்றை குறைக்­கவும், நிறுத்­தவும், இரத்து செய்­யவும் இந்­தியா முடிவு செய்­தி­ருக்­கி­றது.

அதே­போன்று இந்­தி­யாவில் உள்ள பாகிஸ்­தா­னி­யர்கள் வெளி­யேற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்கள், தூத­ர­கங்­களில் இருந்தும் அதி­கா­ரிகள் வெளி­யேற உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இரண்டு நாடு­களும் எல்­லையில் படை­களைக் குவிக்­கின்­றன.

சிந்து நதி ஒப்­பந்­தத்தை இரத்து செய்­வ­தாக இந்­தியா அறி­வித்து பெரும் பூகம்­பத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

1965 ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட இந்த உடன்­ப­டிக்­கையை நிறுத்தி வைப்­ப­தாக இந்­தியா முதல் முறை­யாக அறி­வித்­தி­ருக்­கி­றது.

பதி­லுக்கு பாகிஸ்­தானும், சிம்லா உடன்­பாட்டை நிறுத்தி வைப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.

மொத்­தத்தில் இரண்டு நாடு­களும் ஏட்­டிக்குப் போட்­டி­யான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த தாக்­கு­த­லுக்குத் பின்­ன­ணியில் பாகிஸ்தான் இருப்­ப­தாக குற்­றம்­சாட்­டியே, அதன் மீது இந்­தியா போர்க்­கெ­டு­பி­டி­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

அதே­போல இந்த தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்கள் அல்­லது உத­வி­ய­வர்கள் எனக் கூறப்­ப­டு­கின்­ற­வர்­களின் வீடு­களை இந்­திய இரா­ணு­வத்­தினர் குண்டு வைத்து தகர்க்­கின்­றனர்.

இது நடப்­பது இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்டில் உள்ள ஜம்­மு-­ காஷ்மீர் பகு­தி­களில் ஆகும். தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் பாகிஸ்­தா­னி­யர்கள் அல்ல என்­பது இதன் மூலம் உறு­தி­யா­கி­றது.

அப்­ப­டி­யி­ருக்க, இந்த தாக்­கு­தலை கார­ண­மாக வைத்து பாகிஸ்­தானின் மீது இந்­தியா தாக்­கு­தலை தொடுப்­பது என்­பது பிராந்­திய ரீதி­யாக பதற்­றத்­தையும் போர்ச்­சூ­ழ­லையும் ஏற்­ப­டுத்தும்.

அது மோச­மான பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடும் என்ற அச்­சமும் உள்­ளது.

இந்தச் சூழலில் இலங்கை அர­சாங்கம் எந்தப் பக்கம் சாய்­வது என்ற குழப்­பத்தில் இருக்­கி­றது. ஏனென்றால், அண்­மையில் தான் இந்­தி­யா­வுடன் பாது­காப்பு ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­டது.

அந்த உடன்­ப­டிக்­கையின்படி, இலங்­கையின் நிலப்­ப­ரப்பை மாத்­தி­ர­மன்றி, கடற்­ப­ரப்­பையும் இந்­தி­யா­வுக்கு எதி­ராக எந்­த­வொரு தரப்பும் பயன்­ப­டுத்த முடி­யா­த­படி வாக்­கு­றுதி பெறப்­பட்­டி­ருப்­ப­தாக இந்­தியா கூறி­யி­ருந்­தது.

1971 இந்­திய -பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் போர் விமா­னங்கள், கொழும்பில் எரி­பொ­ருளை நிரப்பிச் சென்ற வர­லாறும் உள்­ளது.

ஆனால், இப்­பொ­ழுது இந்­தி­யா­வுடன் செய்து கொள்­ளப்­பட்­டுள்ள உடன்­பாட்­டுக்கு அமைய, போர்ச்­சூழல் ஒன்றில், இலங்­கையில் பாது­காப்புத் தள­பா­டங்­களை சேமித்து வைப்­ப­தற்­கான களஞ்­சிய வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றதா என்ற சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன.

அப்­ப­டி­யான நிலை ஒன்று ஏற்­ப­டு­மே­யானால், பாகிஸ்­தா­னுடன் இந்­தியா போரில் இறங்­கு­கின்ற போது- இலங்­கையை அது தள­மாக பயன்­ப­டுத்த எத்­த­னிக்கக் கூடும்.

பாது­காப்பு ஒப்­பந்­தத்தில் அது சார்ந்த விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தால், இலங்­கை­யினால் அதற்­கான கோரிக்­கையைத் தட்டிக் கழிக்க முடி­யாது.

ஒரு­வேளை, இந்த ஒப்­பந்­தத்தை ஒரு­த­லைப்­பட்­ச­மாக இரத்து செய்­வ­தா­னாலும் கூட, உட­ன­டி­யாக செய்ய முடி­யாது.

அதற்கு மூன்று மாதங்கள் கால­அ­வ­காசம் கொடுக்­கப்­பட வேண்டும்.

இதனால் தான், இந்­தி­யா­வுடன் செய்து கொள்­ளப்­பட்­டுள்ள பாது­காப்பு ஒப்­பந்­த­மா­னது, இலங்­கையை தேவை­யற்ற பிராந்­திய மோத­லுக்குள் இழுத்துச் செல்லப் போகி­றது என்று எதிர்க்­கட்­சிகள் குரல் எழுப்­பு­கின்­றன.

இந்­தி­யா­வுடன் பாகிஸ்தான் போர் புரி­கின்ற நிலை ஒன்று ஏற்­பட்டால், இலங்­கையும் அதன் இலக்­காக மாறலாம் என்றும் சிலர் எச்­ச­ரிக்­கின்­றார்கள்.

ஏனென்றால், இலங்­கையில் இந்­தியா தளங்­களைப் பேண முயன்­றாலோ அல்­லது தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்த முயன்­றாலோ, அது பாகிஸ்­தா­னுக்கு எரிச்சல் ஊட்டும் விட­ய­மாக இருக்கும்.

ஆனால், இலங்­கை­யுடன் பாகி ஸ்தான் நெருங்­கிய உற­வு­களை கொண்­டி­ருக்­கி­றது.

இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் பரஸ்­பர பாது­காப்பு, இரா­ஜ­தந்­திர, பொரு­ளா­தார உற­வுகள் காணப்­ப­டு­கின்­றன.

கடந்த 28ஆம் திக­தியில் இருந்து, 30ஆம் திகதி வரை 5 ஆவது பாகிஸ்தான்- — இலங்கை பாது­காப்புக் கலந்­து­ரை­யாடல் இஸ்­லா­மா­பாத்தில் இடம்­பெற்­றது.

அதில் இலங்­கையின் பாது­காப்புச் செய­லாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய­கொந்த, இரா­ணுவத் தலைமை அதி­காரி மேஜர் ஜெனரல் சந்­தன விக்­கி­ர­ம­சிங்க, கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் காஞ்­சன பனா­கொட உள்­ளிட்ட உயர் அதி­கா­ரிகள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

போர்ப்­ப­தற்­றங்­க­ளுக்கு மத்­தியில் இவர்கள் பாகிஸ்தான் பாது­காப்பு அமைச்சர், இரா­ணுவத் தள­பதி உள்­ளிட்­டோ­ரையும் சந்­தித்து, இரு­த­ரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது குறித்து பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.

அதே­வேளை, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில், இந்­தியா அளித்த பங்­க­ளிப்­புக்கு நிக­ராக, பாகிஸ்­தானும் பங்­க­ளிப்பு வழங்­கி­யது.

இரா­ணு­வத்­துக்கு தேவை­யான போர்த் தள­வா­டங்­களை பாகிஸ்தான் பெரு­ம­ளவில் விநி­யோ­கித்­தது.

வன்­னியைக் கைப்­பற்றும் நட­வ­டிக்கை ஒரு கட்­டத்தில் ஆட்­டி­ல­றிகள், மோட்டார் குண்­டு­க­ளுக்கு ஏற்­பட்ட தட்­டுப்­பாட்­டினால் இடை­நி­றுத்­தப்­ப­டு­கின்ற நிலை ஏற்­பட்­டது.

அப்­போது, இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா விடுத்து வேண்­டு­கோளை அடுத்து பாகிஸ்தான் அர­சாங்கம், தனது இரா­ணுவ ஆயுதக் களஞ்­சி­யங்­களில் இருந்து ஆட்­டி­லறி, மோட்டார் குண்­டு­களை அனுப்பி வைத்­தது.

இல்­லா­விட்டால், இறு­திக்­கட்டப் போர் நட­வ­டிக்கை மாங்­கு­ளத்­துடன் நின்று போயி­ருக்கும்.

இவ்­வா­றாக, இரு­நா­டு­க­ளுக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ள நிலையில், இந்­தி­யா­வுடன் செய்து கொண்­டுள்ள பாது­காப்பு உடன்­பாட்­டினால், பாகிஸ்தான் உட­ன­டி­யாக இலங்­கையை குறி வைக்கும் என எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை.

ஆனால், பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இலங்­கையை, இந்­தியா தள­மாகப் பயன்­ப­டுத்­து­கின்ற சூழல் ஒன்று உரு­வானால், அது நிலை­மையை சிக்­க­லாக்கக் கூடும்.

இந்­திய- பாகிஸ்தான் போர் நெருக்­கடி, ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கி­றது.

பஹல்காம் தாக்­கு­தலை அநு­ர­கு­மார திசா­நா­யக்க உட­ன­டி­யா­கவே கண்­டித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தார். அது­பற்றி இந்­தியப் பிர­த­ம­ருக்கு கடி­தமும் அனுப்­பினார்.

மூன்று நாட்கள் கழித்து அவர் திடீ­ரென இந்­தியப் பிர­த­ம­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு உரை­யா­டி­யி­ருக்­கிறார்.

15 நிமி­டங்கள் இடம்­பெற்ற அந்த உரை­யாடல் வெறு­மனே துக்கம் விசா­ரிப்­ப­தற்கோ அனு­தாபம் தெரி­விப்­ப­தற்கோ அல்­லது கண்­டனம் தெரி­விப்­ப­தற்கோ இடம் பெற்­ற­தல்ல.

இரண்டு நாடு­களின் தலை­வர்­க­ளுக்கும் இடை­யி­லான அந்த உரை­யா­டலில், பாது­காப்பு ஒத்­து­ழைப்பு தொடர்­பான விட­யங்­க­ளையும், பிராந்­திய பதற்­றத்தை தணிப்­பது தொடர்­பான விட­யங்­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க, இந்­தி­யா­வுடன் இலங்கை இருப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்தக் கருத்து பாகிஸ்­தானால் எவ்­வாறு புரிந்து கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

பாகிஸ்­தா­னுடன் இந்­தியா முரண்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற சூழலில், இந்­தி­யாவின் பக்கம் இலங்கை இருக்­கி­றது என்ற கருத்து, வெளிப்­ப­டை­யா­கவே இலங்­கையை இந்­தி­யாவின் பக்கம் நிற்­ப­தா­கவே அர்த்­தப்­ப­டுத்தும்.

இது இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான உற­வு­க­ளுக்குள் விரி­சலை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும்.

இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் தோன்­றி­யுள்ள பதற்ற நிலை விவகாரத்தில், நாங்கள் நடுநிலையை வகிக்கிறோம் என வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

இந்த விடயத்தில் எந்தப் பக்கமும் சார்ந்து செயற்படவில்லை என்றும், அதனை உறுதிப்படுத்துவதாகவும் தெளிவாக கூறியிருக்கிறது.

இலங்கை நடுநிலையான கொள்கையை கொண்டிருக்கும் ஒரு நாடு என்றால், அது இரண்டு பக்கமும் சாராத கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், அது அக்கொள்கையிலிருந்து விலகி விட்டதாக பரவலான கருத்து உருவாகியிருக்கிறது.

இப்படியிருக்க இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கி வருகிறது.

இதனால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானுடன் மோதல் சூழலை தவிர்க்க வலியுறுத்தியிருக்கலாம்.

ஏனென்றால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறைந்தால்- போர்ச்சூழல் நீங்கினால் தான், இலங்கைக்கு நிம்மதி.

இல்லாவிட்டால் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலை தான் அரசாங்கத்துக்கு ஏற்படும்.

–சுபத்ரா

Share.
Leave A Reply