திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல மணவாழ்க்கை அமைத்து தர பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாதவை.
அவர்களுக்கு ஏற்றவாறு நிறம், வயது, கல்வித் தகுதி, சமூகம், பொருத்தம், வசதி உள்ளிட்டவற்றை பார்த்து பேசி முடித்து திருமணம் முடிப்பது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல.
வரன்களை தேடி அலையும் பெற்றோர்களின் சுமையை குறைக்க இன்றைய காலக்கட்டத்தில் திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது.
இதற்காக பெற்றோர் பிள்ளைகளின் சுயவிபரக் குறிப்பை அளிப்பர். அதில் பெரும்பாலும் வயது, நிறம், கல்வித் தகுதி, சமூகம் என்று காணப்படும். ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா அதிகரித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.