“கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த சாலை விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஜூலை 6 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது. வேகமாக வந்த ஸ்போர்ட்ஸ் பைக் மோதியதில் உணவு டெலிவரி முகவரும், பைக்கில் சென்ற ஒரு இளைஞரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜொமாட்டோ டெலிவரி ஊழியராக பணிபுரியும் கார்த்திக், சாலையோரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், சையத் சரூன் என்ற இளைஞர் சுசுகி ஹயாபூசா ஸ்போர்ட்ஸ் பைக்கில் அதிவேகமாக வந்து கார்த்திக்கின் வாகனம் மீது மோதியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Disturbing Visuals 🚨⚠️
Overspeeding #Suzuki #Hayabusa at 2:15am.
Road Disciplines & Speed within Speed Limits need of the hour.@ChristinMP_ @anil_lulla @DriveSmart_IN @dabir @Nik_blr @kiranurs @sumanthchandar @RCBengaluru @mabhishek242 @Lutapi_
Mysore#RoadSafety https://t.co/PFoyJfZcGA pic.twitter.com/0sf4CmMStP
— Dave (Road Safety: City & Highways) (@motordave2) July 8, 2025
மோதிய பிறகு, ஹயாபூசா பைக் சாலையில் சிறிது தூரம் சென்று மின் கம்பத்தில் மோதியது. இதனால் பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீப்பிடித்தது.
விபத்தில் பலத்த காயமடைந்த சையத், உள்ளூர்வாசிகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,
ஆனால் சிகிச்சையின் போது இறந்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். “,