யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.
தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி விட்டு , நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
சாரதி பேருந்தில் இருந்த நிலையிலேயே பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது.
தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பஸ்ஸினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.