இலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் பரீட்சை முடிவுகளில் சித்தி, தோல்வி என்ற விடயத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் புகைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் கலாசாரம் நிறுத்தப்படும்.

அனைத்து மாணவர்களும் வெற்றிகரமாக எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் கல்வி முறை ஒன்றையே முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மத்தியில் தோல்வி என்ற ஒரு விடத்தை இல்லாமல் செய்து, அனைவரும் இந்த நாட்டில் உலகில் சமமாக வெற்றிகரமாக வாழ முடியும் என்ற மனநிலைமையை ஏற்படுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை, உயர்கல்விகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் அனைத்து மாணவர்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கல்வி என்பது மாணவர்களுக்கு சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் எற்படுத்த வேண்டும்.

இதனால் எதிர்காலத்தில் மாணவர்கள் பரீட்சையில் வெற்றி மற்றும் தோல்வி என்ற ஒரு நோக்கில் பார்க்கப்போவதில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version