பசில் ராஜபக்ஷ சுமார் 1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக  விசாரணை ஆணை க்குழு விசாரணைகளை ஆரம்பித் துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின்
தலைவர் கமந்த துஷார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிர யோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத் தின் இறுதி அறிக்கையில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப் படும் குற்றச்சாட்டு விரிவா கக் கூறப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவில் முறைப் பாடளித்துள்ளார்.

2010-2014 வரையான காலப்பகுதியில் பஷில் ராஜ பக்ஷ உள்நாட்டு பயணங்
களுக்கு விமானப்படை விமானங்களைப் பயன்படுத் தியதாகக் கூறப்படுகிறது,

அதில் ‘மகா நெகும’ திட்டத் திலிருந்து ரூ. 155,451, 612 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத் திற்குச் சொந்தமான 14 வாகனங்களை அவர் பயன்ப டுத்தியதாகவும், பாதுகாப்பு க்காகப் பயன்படுத்தப்படும் மூன்று சொகுசு வாகனங் கள் மற்றும் 11 பிற வாக னங்கள் உட்பட, அரசுக்கு ரூ.612,000,000 இழப்பு ஏற்பட்டதாகவும் முறைப் பாட்டில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 2010 முதல் 2015 வரையான காலப்ப குதியில் 64 கடற்படை வீரர் கள் மற்றும் 84 இராணுவ வீரர்கள் அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக் கப்பட்டதாகவும், பொது நிதியில் அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு களுக்காக செலவிடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

இந்த விடயங்கள் ஜனாதி பதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கையில் தெளிவாக கோடிட்டுக் காடட்டப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உட்பட பொறுப்பான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலை வர் கமந்த துஷார வலியு றுத்தியுள்ளார்.

இந்த முறைப்பாட் டுக்குரிய ஆவணங்களை கமந்த துஷ்டர 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலஞ் சம் அல்லது ஊழல் தொடர் பான ஆணைக்குழுவில், ஒப்படைத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version