தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, சஞ்சீவ தர்மரத்னவை நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

லலித் பத்திநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து அகற்றி மத்திய மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை இலங்கை பொலிஸ் நிர்வாகப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களுக்கு  தவறான தகவல்

தேசிய பொலிஸ் ஆணையத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லலித் பத்திநாயக்க பிற மூத்த அதிகாரிகள் பற்றிய தவறான தகவல்கள் சமூக ஊடகங்களுக்கு வழங்கியதாகவும், மிகவும் இரகசியமான உள்ளக பொலிஸ் கோப்புகளை வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளதாகவும் குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version