அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய எச்சரிக்கைகளில், நாட்டு (NATO) இராணுவ கூட்டணியிலிருந்து வெளியேறுவது மிகவும் அடிக்கடி அவர் முன்வைத்த ஒன்றாகும்.

தனது முதல் பதவிக்காலத்திலேயே அவர் அதை செயல்படுத்துவதற்கு மிக அருகில் சென்றிருந்தார்.

ஆனால் இந்த முறை அவர் கூட்டணி உறுப்பினர்கள் மீது அதிகக் கோபத்தில் இருக்கிறார்.

நாட்டோவின் முன்னாள் பொதுச்செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ( Nato’s former chief Jens Stoltenberg ), தனது சமீபத்திய நினைவுக் குறிப்பான On My Watch என்னும் நூலில், “டிரம்ப் தனது மிரட்டலை நடைமுறைப்படுத்தத் தயாராக இருந்தார் என்பதை நாம் தெளிவாகக் கண்டோம்” என்று குறிப்பிடுகிறார்.

அவர் மேலும், Fox News நிகழ்ச்சியில் தோன்றி, நாட்டு உறுப்புநாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க டிரம்ப் அழுத்தம் தந்ததற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

அமெரிக்கா நாட்டோவிலிருந்து விலகுவதைப் பற்றிய உரையை வெள்ளை மாளிகை தயாரித்திருந்தாலும், டிரம்ப் அதை வெளியிடவில்லை.

இப்போது, தனது இரண்டாவது பதவிக்காலத்தில், தாம் ஆலோசிக்கப்படாத ஒரு போரில் நாட்டு உறுப்புநாடுகள் கலந்து கொள்ள தயங்குவதாலும், அதன் நோக்கங்களை இன்னும் புரிந்து கொள்ளாததாலும், டிரம்ப் மேலும் அதிருப்தியடைந்துள்ளார்.

ஆனால், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள், சில முக்கிய துறைகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தை உணர்கின்றன.

குறிப்பாக, அரபு கூட்டாளிகளின் பாதுகாப்பையும், முக்கியமான ஹார்முஸ் நீரிணையை திறந்துவைப்பதையும் அவை கவனத்தில் கொள்ளுகின்றன.

இந்த புதிய நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்களது பாதுகாப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை உறுதிப்படுத்தும்.

ஆனால், அமெரிக்க இராணுவத்தின் சக்தி மிக முக்கியமானது என்ற கடுமையான உண்மை இன்னும் நிலவுகிறது.

தற்போதைய நாட்டோவின் முன்னாள் பொதுச்செயலாளர் மார்க் ருட்டே,(Nato’s current chief Mark Rutte)  “டிரம்பை சமாதானப்படுத்தும் நபர்” எனக் கருதப்படுகிறார்.

அமெரிக்க அதிபரை தனது பக்கம் வைத்திருக்க அவர் முழு முயற்சியும் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version