குவைத் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (Kuwait Petroleum Corporation) இயக்கப்படும் அல்-அஹ்மதி (Al Ahmadi) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது, வெள்ளிக்கிழமை அதிகாலை ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி முகமை அதன் ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் “பல செயல்பாட்டுப் பிரிவுகளில்” (Operational Units) தீ விபத்து ஏற்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபத்தில் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்புப் படையினரும், தீயணைப்புப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, குவைத் மீது “பகைமை நாடுகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்” நடத்தப்பட வாய்ப்புள்ளதாக ‘X’ தளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

