இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘துரந்தர்’ (Dhurandhar). இப்படத்தில் ‘சைவம்’ படப் புகழ் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்ததுடன், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் (துரந்தர் 2) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற நிலையில், தற்போது முதல் பாகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம், தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாகத் தொலைக்காட்சியில் அறிமுகமாகிறது. வருகிற மே 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு விஜய் டிவியில் ‘துரந்தர்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தெலுங்கில் ‘ஸ்டார் மா’, மலையாளத்தில் ‘ஏசியாநெட்’ மற்றும் கன்னடத்தில் ‘கலர்ஸ் கன்னடா’ ஆகிய தொலைக்காட்சிகளிலும் இப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. விடுமுறை தினத்தில் ஒளிபரப்பாவதால், இந்தப் படம் மிகப்பெரிய டிஆர்பி (TRP) சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply