நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் 27-ஆம் திகதி 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியத் தேவைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் இந்த விநியோகம் உறுதிப்படுத்தப்படும்.
இந்த டீசல் கப்பலைத் தொடர்ந்து, ஏப்ரல் மாத இறுதிக்குள் மற்றுமொரு பிரம்மாண்ட பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. இக்கப்பல் மூலம் சுமார் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இந்த எரிபொருள் தொகைகள் நாட்டிற்கு கொண்டுவரப்படுவதால், சந்தையில் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை என்றும், விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

