இலங்கையின் கல்வியறிவு விகிதம் சர்வதேச அளவில் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தாலும், நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் சிறுவர்களின் ஆரோக்கிய நிலை கவலைக்கிடமாக உள்ளது. கண்டியில் நடைபெற்ற ‘தொழில்முறை விரிவுரையாளர்கள் அறக்கட்டளை’ கூட்டத்தில் உரையாற்றிய மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் சமூக சுகாதார விசேட மருத்துவ நிபுணர் சுரங்க பெர்னாண்டோ, நாட்டில் 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 25 சதவீதமானோர் மந்தபோஷணையால் (Malnutrition) பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

போஷணைக் குறைபாடு என்பது வெறும் உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு “அறிவுசார் குறைபாடு” என அவர் எச்சரித்துள்ளார். கருவிலிருந்தே முறையான போஷணை கிடைக்காததால் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி குன்றி, அறிவு வளர்ச்சியில் பாரிய தேக்கம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, பாடசாலைக் கல்வியைத் தொடரும் மாணவர்களில் நான்கில் ஒரு பகுதியினரால் தங்களின் முழுமையான கல்வித் திறனை வெளிப்படுத்த முடியாமல் போயுள்ளது. சிறந்த கல்விச் சூழலை உருவாக்கினாலும், அடிப்படை போஷணை இன்றி மாணவர்களை முன்னேற்றுவது கடினம் என்பதால், சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் வாழும் இச்சிறுவர்களைப் பாதுகாக்க உடனடியாகத் தேசிய ரீதியிலான தீர்வுகள் காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply