கொட்டாவையிலிருந்து அத்துருகிரிய நோக்கி அதிகாலை 2.00 மணியளவில், மற்றுமொரு குழுவினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிச் சென்று அருகில் இருந்த மதில் ஒன்றில் பலமாக மோதியுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

