பூநகரி சங்குப்பிட்டி கடலில் இருந்து கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் நேற்றைய தினம் மீட்கப்பட்ட குறித்த சடலம் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கை மற்றும் கால்கள் நைலோன் கயிற்றினால் கட்டப்பட்டு வலையினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்த சடலம் நேற்றைய தினம் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.