பைசர் தடுப்பூசி இரண்டையும் பெற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஏன் மரணமடைந்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இருவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அவர் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
சாதாரண நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று திடீரென அவர் மரணமடைந்தார்.
கொவிட், நிமோனியா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மங்கள சமரவீர நீண்ட காலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டிருந்த நிலையில், அதற்காக அவர் சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.(