மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், மட்டு போதனா வைத்தியசாலையில் 6 பேர் உட்பட 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை 134 பேர் உயிரிழந்ததாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அச்சுதன் தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ந்து 1,679 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளார் அதிகரித்துவருகின்ற நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் முடிந்தளவு வீடுகளில் தங்கிருந்து சுகாதார முறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அவர் தெரிவித்தார்.