கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றில் இன்று (11) நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சி செய்த வேளையில் குண்டொன்று வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கொள்ளையிட முயன்றபோது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை தடுக்க முயன்றுள்ளார்.
இவ்வேளையிலேயே குண்டு வெடித்துள்ளது. இதன்போது, குறித்த நபரும், பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலியாகியுள்ளனர்.
கொள்ளையிட வந்த நபர், குறித்த குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.