வடக்கு–கிழக்கில் புலி­களின் மேலா­திக்­கத்­துடன் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றைத் தரு­வ­தற்கு அரசு முன்­வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ. யோ வடக்கு – கிழக்கை  முழு­மை­யாக  ஆள்­வ­தற்­கான இடைக்­கால சுயாட்சி அதி­கார சபையை 2003 ஒக்­ரோ­பரில் நிபந்­த­னை­யாக முன்­வைத்­தது.

அந்த சபைக்­கான சில அதி­கா­ரங்கள் ஒற்­றை­யாட்சி அர­ச­மைப்பின் கீழ் சாத்­தி­ய­மா­னவை எனினும், ஏனை­யவை நிச்­ச­ய­மாக அப்­ப­டி­யி­ருக்­க­வில்லை. அத்­த­கைய முழு­மை­யான அதி­கா­ரத்தை வழங்­கு­வது கூட்டு சமஷ்டி முறையின் கீழ் மட்­டுமே சாத்­தி­யப்­ப­டக்­கூ­டி­யது.

வன்­மு­றைக்கு முடிவு கட்டும் விதத்தில் அமை­யக்­கூ­டிய பரந்த சமா­தான உடன்­ப­டிக்­கையின் போது அதன் பகு­தி­யாக சமஷ்டிக் கட்­ட­மைப்பு இடம்­பெ­று­வதை, கடை சியில் பொது­மக்கள் ஏற்று அங்­கீ­க­ரிப்­பார்­க­ளா­யினும், இடைக்­கால உடன் பாடாக ‘இடைக்­கால சுயாட்சி அதி­கார சபையை’ மக்­க­ளிடம் செலுத்­து­வது கஷ்­ட­மா­ன­தா­கவே இருக்கும்.

யுத்த நிறுத்­தத்­துக்கு இணங்கி   சமா­தானத் தீர்­வுக்­கான பேச்­சுக்கு புலிகள் நேர்­மை­யுடன் வந்­தார்­களா?  பல பார்­வை­யா­ளர்கள் அது புலி­களின் தந்­தி­ரோ­பாய நகர்வு மட்­டுமே என்றும், புலி­களின் உண்­மை­யான திட சங்­கற்பம் தனி­நாடு என்றும் இந்த விட­யத்தை நோக்­கி­னார்கள்.

அர­சியல் தீர்­வுக்­கான இணக்கம் ஒன்­றுக்கு வரு­வ­தற்­கான இய­லா­மை­யி­லேயே தென்­னி­லங்­கையின் அர­சியல் முறைமை இருந்­ததை அது அறிந்தே இருந்­தது.

அர­ச­மைப்பு ரீதி­யான தீர்வு இல்­லாத நிலையில், ஆசு­வாசப் படுத்­துவதற்­கான நேரத்­தையும் பெற்றுக் கொண்டு, இடைக்­கால நிர்­வாகத்தையும் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் எடுப்­ப­தற்­காக எல்.ரி.ரி.ஈ. சற்று வளைந்து கொடுக்க முன் வந்­தமை போன்றே அது தோன்­றி­யது.

அதன் பேச்­சுக்­கான சிரேஷ்ட பிர­தி­நிதி கூட சமஷ்டிக் கட்­ட­மைப்­புக்குள் தமி­ழர்­களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஆராயும் திட்­டத்தை விடுதலைப் புலிகள் கைவிட்டி ருந்­தனர் என்­பதைப் பின்­னாளில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தன்­னு­டைய கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சங்­களை எல்.ரி.ரி.ஈ. எப்­போதும் இரும்­புக்­கரம் கொண்டே ஆளுகை செய்­தது. எத்­த­கைய அதிருப்தியும் பொறுத்துக் கொள்­ளப்­ப­ட­வே­யில்லை. ஏனைய தமிழ்க் கூட்­ட­மைப்­பு­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான செயற்­பாட்­டா­ளர்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

மத்­தியில் அதி­காரம் குவிக்­கப்­பட்ட  இலங்­கையின் ஒற்­றை­யாட்சி அர­சி­லி­ருந்து தமி­ழர்­க­ளுக்கு நீதி கிட்­டவே மாட்­டாது என்ற குற்றச்சாட்டோடு தனி­நாட்­டுக்­கான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

ஆனால் உரு­வாக்­கப்­பட  இருந்த தனி­நா­டான தமி­ழீ­ழமோ, சிங்­கள, முஸ்லிம் மக்­களின் பல­மான ஜனப்­ப­ரம்பல் அங்­கி­ருந்த போதிலும், அது, மத்­தியில் அதி­காரம் குவிக் கப்­பட்ட, தனிக்­கட்சி ஆட்­சி­முறை கொண்ட, ஒற்­றை­யாட்சி நாடாக முன் மொழி­யப்­பட்­ட­மைதான் கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

எல்.ரி.ரி.ஈயின் பிடி­வாதம், மித­வாதத் தமி­ழர்­களை ஏமாற்­றத்தில் தள்ளி யது மட்­டு­மல்­லாமல், கரும்­பா­றை­யாக இருந்த அந்த அமைப்­பி­லேயே உடைவை ஏற்­ப­டுத்­தி­யது.

யுத்த நிறுத்த காலத்தில் எல்.ரி.ரி.ஈயின் கிழக்கு மாகாணத் தலை­வர்கள் பிரிந்து சென்­ற­மை­யோடு, பின்னர் எல்.ரி.ரி.ஈ யை இலங்கைப் படைகள் தோற்­க­டிக்­கவும் உத­வினர்.

புலி­களின் கடும்­போக்­கா­னது சிங்­களப் பெரும்­பான்­மை­யோரில் உள்ள கடும்­போக்­கா­ளர்­க­ளுக்கு உத­வி­யது. மஹிந்த ராஜ­பக் ஷ 2005இல் சிங்­களக் கடும்­போக்­கு­வா­தி­களின் உத­வி­யுடன் ஜனா­தி­பதி பத­விக்கு உயர்ந்தார்.

pirapakaranமித­வா­தியை விட கடும்­போக்­கா­ளரை எல்.ரி.ரி.ஈ. விரும்பி, தங்­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சத்தில் வாக்­க­ளிப்­பன்று பகிஷ்­க­ரிப்பை நடை முறைப்­ப­டுத்தி, அதன் மூலம், உயர்ந்­த­பட்ச அதி­காரப் பர­வ­லாக்­க­லுக்கு இணங்கி முன்­வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஒரு சில நூறாயிரம் தொகை­யு­டைய முக்­கிய வாக்­கு­களால் வெற்­றியை அது மறுக்கச் செய்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சியல் தீர்வில் அதற்கு சிரத்தை இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த இது ஒன்று மட்­டுமே போது­மா­னது.

4md5இரா­ணுவப்படை என்ற முறையில் எல்.ரி.ரி.ஈ. தன்னை அள­வுக்கு அதி­க­மாக மதிப்பிட் டுக் கொண்­டது என்­பதும் தெளி­வா­னது. ஆனால், நான்கு வரு­டத்­துக்குள் ராஜ­பக் ஷ இரா­ணுவ   இயந்­திரம் எல்.ரி.ரி.ஈ. ஐ முழு­மை­யாக  சின்­னா­பின்னமாக்­கி­யது.

அத்­தோடு 9–1 இற்குப் பின்­ன­ரான சர்­வ­தேச நிலை­மை­களை எல்.ரி.ரி.ஈ. தவ­றாகப் புரிந்து கொண்­டது. யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் இடம்பெற்­றவை குறித்து சிலர் மகிழ்­வு­ற­வில்­லை­யா­யினும், பெரும்­பா­லான சர்­வ­தேச செயல் தரப்­பினர் எல்.ரி.ரி.ஈ.யை ராஜ­பக்ஷ வெல்வதற்கு நேரடி யாகவோ, மறை­மு­க­மா­கவோ உத­வினர்.

எல்.ரி.ரி.ஈக்கு எதி­ரான யுத்தம் நடந்து கொண்­டி­ருந்த போதே ஜனா­தி­பதி ராஜ­பக்ஷ சர்வகட்சி மாநாட்டை கூட்­டினார். அது பின்னர் அரசமைப்புத் தீர்­வுக்­கான யோச­னை­களை முன்­வைப்­ப­தற்­கான சர்வ கட்சிப் பிர­தி­நி­திகள் குழு­வாக தோற்றம் கொண்­டது. இதற்கு உதவுவதற்காக 17 பேர் கொண்ட நிபுணர் குழு­வையும் அவர் நிய­மித்தார்.

அந்த நிபுணர் குழு தங்­க­ளுக்குள் பிள­வுண்டு கருத்து வெளி­யிட்­டது. சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள், முஸ்­லிம்கள் என அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய 11 நிபு­ணர்கள் வலி­மை­யான அதி­காரப் பகிர்வு உடன்­பாடு ஒன்றை முன் மொழிந்­தனர்.

சிங்­க­ள­வர்­க­ளான நான்கு நிபு­ணர்கள் மிகக் குறைந்த அதி­காரப் பகிர்வுத் திட்­டத்தை முன்­மொ­ழிய, மற்­றைய இருவர் தங்­களின் சொந்த அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­தனர்.

மேற்­படி ‘பெரும்­பான்­மை­யி­னரின் அறிக்கை‘ என்று கூறப்­பட்ட யோசனைத் திட்டம் விரி­வான அதி­காரப் பகிர்வில் இரண்டு பக்க அணுகு முறை­களைக் கொண்­டி­ருந்­தது.

சமூ­கங்கள் தத்­த­மது  பிர­தே­சங்­களில் அதி­கா­ரத்தைப் பிர­யோ­கித்து தமது சொந்தப் பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்யும் அதே­வே­ளையில், மத்தி­யிலும் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து .கொள்ளவும், பல்­வேறு சமூ­கங்­களை ஒன்­றி­ணைத்து தேசிய ஒன்­றி­ணைவை மத்தி பலப்­ப­டுத்­தவும் அது சிபா­ரிசு செய்­தது.

அந்த முன்­மொ­ழிவில் முக்­கி­ய­மான அம்சம் என்­ன­வென்றால் இலங்கையின் ‘மக்கள்’ என அர­ச­மைப்பில் குறித்­தொ­துக்­கப்­ப­டுவோர் ‘இலங்­கையின் மக்கள் கூட்­டங்­களின் அங்கம்’ என்­ப­தாகும்.

அத்­தோடு ‘ஒவ்­வொரு மக்கள் கூட்­டமும்’, அதன் கார­ண­மாக, அரச அதி­கா­ரத்தில் உரிய பங்­கையும் பெறும். இது, பொது­வான ‘இலங்­கையர்’ என்ற அடை­யா­ளப்படுத்தலைப் பலவீனப்படுத்தாமல் முன்னெடுக்கப்படும்.

இந்தப் பெரும்­பான்மை நிபு­ணர்­களின் அறிக்கை சிங்­கள மித­வா­தி­களினாலும் தமிழ், முஸ்லிம், இந்­தியத் தமி­ழர்கள் தரப்பில் பெரு­வா­ரி­யானோராலும் வர­வேற்­கப்­பட்­டது.

எல்.ரி.ரி.ஈயோ இந்த அறிக்கை குறித்து கருத்து எத­னையும் வெளி­யிட முன்­வ­ராமல் போனமை ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­ய­தன்று. ஆனால் அது, அக்கு­ழுவின்  நிபு­ணர்­க­ளான தமி­ழர்கள் தமது இனத்தின் சார்பில் எப்­படி அதில் பிர­தி­நி­தித்­துவம் செய்­யலாம் எனக் கேள்வி எழுப்­பி­யது.

நட­வ­டிக்­கைகள் மூன்று வரு­டங்கள் இழு­பட்­டன. சிங்­கள தேசியக் கட்­சிகள் பல கட்­டங்­களில் வெளி­ந­டப்புச் செய்­தன. ஆனால் அரசின் பிர­தான கட்­சி­யான ஸ்ரீ.ல.சு.கட்சி தொடர்ந்து அதில் நீடித்­தது.

உத்தியோக­பூர்வ அறிக்கை ஏதும் வெளி­யி­டப்­ப­டாத போதிலும்,குழுவின் தலைவர் திஸ்ஸ விதா­ரண, அதன் முன்­மொ­ழி­வு­களின் சுருக்கக் குறிப்பு ஒன்றை 2009 இல் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்தார்.

‘பெரும்­பான்மை அறிக்கை’ பரிந்­துரை செய்­த­வற்­றிலும் மிகக் குறை­வா­ன­வற்­றையே அந்த முன்­மொ­ழி­வுகள் கொண்­டி­ருந்­தன. எனினும் ஒற்­றை­யாட்­சிக்குள் மத்­தி­யுடன் விரி­வான அதி­காரப் பகிர்வு பற்றி அவை பிரஸ்­தா­பித்­தன. அத்­துடன் அவை விரி­வான பேச்­சுக்­கான அடிப்­ப­டை­யாகக் கொள்ளக் கூடி­ய­வை­யாக வும் அமைந்­தன.

முன்­மொ­ழி­வு­களின்  சுருக்­கத்தைத் தாம் ஜனா­தி­ப­தி­யிடம்  ஒப்­ப­டைத்தார் என விதா­ரண மீள்­வ­லி­யு­றுத்­திய போதிலும் ஜனா­தி­பதி செயலகமோ அத்­த­கைய பிரதி தனக்குக் கிடைத்­தது என்­பதை மறுத்தே வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அதன் தொடர்ச்­சி­யாக இலங்கைத் தொழிலாளர் காங்­கி­ரஸைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய ஆர்.யோக­ரா­ஜனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய நிஸாம்காரி­யப்­பரும் அந்த முடி­வு­களின் சுருக்­கத்தை கூட்­டங்­களின் பதி­வு­களின் அடிப்­ப­டையில் வெளி­யிட, அது சரி­யா­னதே என்று விதா­ர­ணவும் ஏற்றுக் கொண்டார்.

வட அயர்­லாந்து, காஷ்மீர், முன்னாள் யூகோஸ்­லா­வியா, சூடான் போன்ற பிணக்குப் பிர­தே­சங்­களில் கருத்துக் கணிப்பை நடத்தி தேர்ந்த அனுபவம் பெற்­றி­ருந்த – லிவர்பூல் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த – கலா­நிதி கொலின் இர்வின், யுத்தம் முடி­வ­டை­வ­தற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் – 2009 மார்ச்சில் குழுவின்- பூர்­வாங்க முன்­மொ­ழி­வுகள் தொடர்பில் ஆய்வு ஒன்றை நடத்திப் பார்த்தார்.

ஒரு வருடம் கழித்து – மார்ச் 2010 இல் – யுத்தம் முடிந்து 9 மாதங்­களின் பின்­னரும் – அதே முன்­மொ­ழி­வுகள் ஆய்வு செய்­யப்­பட்­டன. இம்­முறை வடக்கு மாகாண மக்­க­ளையும் உள்­ள­டக்கி அதிக மாதி­ரிகள் உள்­வாங்­கப்­பட்­டன

முன்­மொ­ழி­வு­களை முன்­வைத்து, அவை குறித்து 14 விட யங்­களை ஒழுங்­கு­ப­டுத்தி, அந்த விட­யங்கள் தொடர்பில் மக்­களின் கருத்துக்கள் உள்வாங்­கப்­பட்­டன.

‘அத்­தி­யா­வ­சியம்’, ‘விரும்­பத்­தக்­கது’, ‘ஏற்றுக் கொள்­ளக்­கூ­டி­யது’, ‘தாங்­கக்­கூ­டி­யது’, ‘ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யா­தது’, என பல்­வேறு விடை­களில் ஒவ்­வொன்றை  ஒவ்­வொரு விட­யத்­துக்­கு­மான பதிலாகத் தெரி­வு­செய்­யும்­படி மக்கள் கேட்­கப்­பட்­டனர்.

கடை­சி­யாக முழு முன்­மொ­ழிவு வடிவம் தொடர்­பிலும் அவர்­களின் கருத்­துக்கள் பெறப்­பட்­டன. அது தொடர்பில் தமி­ழர்கள், முஸ்­லிம்கள், இந்தியத் தமிழ் மக்கள் ஆகியோர் ‘அத்­தி­யா­வ­சியம்’, ‘விரும்­பத்­தக்­கது’, ‘ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யது’, என்ற பதிலை அளித்த விகிதம் பின்­வ­ரு­மாறு அமைந்­தது.

தமிழர் – 2009 – 82% 2010 – 83%

முஸ்­லிம்கள் – 2009 – 85% 2010 – 88%

இந்­தியத் தமிழர் – 2009 – 90% 2010 – 90%

இந்தப் புள்ளி விவ­ரங்கள் ஆச்­ச­ரி­ய­மா­னவை அல்ல. ஆனால் சிங்­க­ளவர் களின் பிர­தி­ப­லிப்பு ஆச்­ச­ரியம் தரு­வ­தாக இருந்­தது:-

2009 – 59%(அத்­தி­யா­வ­சியம் 13%விரும்­பத்­தக்­கது 21%ஏற்றுக் கொள்­ளத்­தக்­கது 25%)

2010 – 80% (அத்­தி­யா­வ­சியம்   20%விரும்­பத்­தக்­கது  38%ஏற்றுக் கொள்­ளத்­தக்­கது  22%) அதி­காரப் பகிர்வை சிங்­க­ள­வர்கள் விரும்­ப­வில்லை எனக் குறிப்­பிட்டு அதை எதிர்த்­த­வர்கள் பிர­சா­ரப்­ப­டுத்­திய கட்­டுக்­க­தைக்கு மாறாக, எல்.ரி.ரி.ஈயின் முகத்­துக்கு முன்னால் அதன் தோல்வி தோன்றியி­ருந்த – யுத்தம் முடி­வு­று­வ­தற்கு மூன்று மாதங்­க­ளுக்கு முந்­திய – காலத்தில் 59 வீதத்­தினர் APRCயின் முன்­மொ­ழி­வு­களை ஏற்றுக்கொள்ளத் தக்­க­வை­யாகக் கண்ட னர்.

ஒரு வரு­டத்தின் பின்னர் – அதா­வது யுத்தம் முடி­வுற்று 9 மாதங்­களின் பின்னர் – அந்த எண்­ணிக்கை 80 வீத­மாக உயர்ந்­தது. அப்­ப­டி­யி­ருந்த போதிலும், ராஜ­பக் ஷ அரசு  APRC  முன்­மொ­ழி­வுகள் குறித்து இன்னும் கருத்து எத­னையும் வெளி­யி­ட­வில்லை.

அந்த ஆட்­சிப்­பீடம் இன்­னமும் இரா­ணுவ வெற்­றியின் கீர்த்­தியில் திளைக்­கி­றது. மாறாக, ஆயுதப் பிணக்­குக்குப் பிரதான கார­ண­மாக அமைந்த மூல விடயம் – அரச அதி­கா­ரத்தைப் பகிர்தல் – இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கி­றது என்­பதைப் புரிந்­து­கொள்ளத் தவ­று­கின்­றது.

ராஜ­பக்க்ஷ ஆட்­சிப்­பீ­டத்தில் கடும்­போக்­கா­ளர்­களே அதி­கா­ரத்தைப் பிடித்து வைத்­தி­ருக்­கி­றார்கள். அரசி யல் தீர்வு குறித்து எப்­போ­தா­வது பேசப்­பட்­டாலும் அது பின்­தள்ளப் பட்­ட­தா­கவே உள்­ளது.

இலங்­கையின் கதை என்­பது சிங்­க­ள­வர்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் பொறுத்­த­வரை சந்­தர்ப்­பங்­களைக் கோட்டை விட்ட விவ­கா­ர­மா­கவே உள் ளது. இலங்­கையைப் பொறுத்­த­வரை யுத்தம் முடிந்து விட்­டது.

ஆனால் பிணக்கு முடி­ய­வில்லை. எல்லா சமூ­கங்­க­ளுக்கும் அரச அதி­கா­ரத்தை உரி­ய­மு­றையில் பகிர்­வதே இரண்­டா­வது விட­யத்தை முடி­வுக்குக் கொண்டு வரும் – அது எல்லா அவ­தா­னி­க­ளுக்கும் பிர­தி­யட்­ச­மான உண்மை.

ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இலங்­கை­ய­ருக்கு அது தெரி­ய­வில்லை. எமது இனத்­துவ – அர­சியல் விவ­கா­ரத்­துக்கு தீர்வு காண்­ப­தற்­கான அத்­தி­வா­ரத்தைப் போடு­வ­தற்­கான எமது இய­லாமை ஒரு­புறம் இருக்க, மறு­பு­றத்தில் அதற்குச் சமாந்­த­ர­மாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை உச்­ச­பட்­சத்­திற்கு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

1978 அர­ச­மைப்பின் கீழ் அரச முறைமை குறித்து விவா­தித்த டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, அது ‘பாராளு­மன்ற ஜன­நா­யகம் என்ற வெளிச் சட்­டையைப் போர்த்­திய யாப்பு ரீதி­யான ஜனா­தி­பதி முறை சர்­வா­தி­காரம்’ என்று குறிப்­பிட்­டி­ருந்தார். அது உண்மை என­பது நிரூபணமாகியுள்ளது.

கால­வ­ரை­ய­றையும் இல்­லாமல், 17 ஆவது  திருத்­தமும் செய­லி­ழந்து   போன­மையால், இலங்­கையின் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை மிக வலி­மை­யா­ன­தா­கவும் மிக இழி­வா­ன­தா­கவும் மாறி­வ­ரு­கின்­றது.

Mahinda New one_CIநிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையின் எதிர்­காலம் என்ன? நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை சரி­யென வாதிட்ட ஐ.தே.கட்சி அதன் சொந்தத் தயா­ரிப்பின் முழு வலி­மை­யையும் உணர்ந்த போதுதான் கடை­சி­யாக அதை இல்­லா­தொ­ழிக்கும் முடி­வுக்கு மனதை மாற்றிக் கொண்­டது.

தமிழ், முஸ்லிம் கட்­சி­களைப் பொறுத்­த­வரை அது, தங்­க­ளது இனத்­துக்கு எந்தப் பாது­காப்பும் தராது என்­பதில் எந்தப் பிர மையும் அவற்­றுக்கு இல்லை.

முரண்­பா­டாக, தற்­போ­தைய ஸ்ரீ.ல.சு.க. தலை­மையும், சிங்­களக் கடும் போக்­கு­வா­தி­க­ளுமே அதை இன்றும் ஆதரித்து, அதே­ய­ள­வுக்குத் தக்­க­வைக்­கவும் முனைந்து நிற்­கின்­றனர்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் மன­நி­லையில் ஜனா­தி­பதி ராஜ­பக்ஷ இல்­லாது விடினும், அழுத்­தத்தின் கீழ் அதனை அவர் செய்­ய­மாட்டார் என்று கூறு­வ­தற்கும் இல்லை.

எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் என்ற  ‘தனி விட­யத்தை மட்டும்’ ஆராய் வது குறித்து ஏற்­க­னவே பேச்­சுக்கள் அடி­ப­டு­கின்­றன. அந்தத் தனி விடய விவ­காரம் முழு எதி­ர­ணி­யையும் ஒன்­றி­ணைப்­ப­துடன், ஸ்ரீ.ல.சு.கட்சிக் குள் உள்ள அதி­ருப்­ப­தி­யா­ளர்­களை நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்லா தொழிப்­ப­தற்­கான உட்­க­ல­கத்­துக்குத் தூண்­டு­வதில் வினைத்­தி­ற­னையும் ஊட்­டக்­கூ­டி­யது.

தனது நிலைக்கு மோச­மான சவால் வரு­மானால் ராஜ­பக் ஷ, எதி­ர­ணியின் எதிர்ப்பைச் சமா­ளிக்க நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யயைக் கைவி­டவும் முன்­வ­ரலாம்.

எப்­ப­டி­யெ­னினும், அவர் தமது தற்­போ­தைய நிலையை ஸ்திரப்­ப­டுத்திப் பேணு­வா­ராயின், நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க வேண்டும் என்­ப­தற்­காக எதி­ர­ணியும், ஸ்ரீ. ல.சு.கட்சி அதி­ருப்­தி­யா­ளர்­களும் ஒன்­றி­ணையும் விவ­கா­ர­மாக அது அமை­வ­தற்­கான சாத்­தி­யங்கள் அனே­க­முண்டு.

முன்­மொ­ழி­வு­களை தயா­ரிப்­ப­திலும் விட அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வது மிகச் சிக்­க­லா­னது. 1994 முதல் 2000 வரை­யான காலப்­ப­கு­தியில் முன்னெ டுக்­கப்­பட்ட அர­ச­மைப்பு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை ஒத்த முயற்­சி­க­ளிலும் பார்க்க, புதிய வடி­வத்­தி­லான ஓர் அர­ச­மைப்பை உருவாக்க முயல்­வது  இப்­போ­தைய நிலையில் சாலச்­சி­றந்­தது.

இன ரீதி­யாக சமா­தா­னத்தை எட்­டு­வ­தற்கு மட்­டும்தான் சீர்­தி­ருத்தம் அவ­சியம் என்­ப­தல்ல, அர­ச­மைப்பின் மேன்மை, உரிமைச் சட்­டங்கள், தேர்தல் சீர்­தி­ருத்தம், சுயா­தீ­ன­மான நீதித்­துறை, சட்­டத்தின் ஆட்­சியை மீள ஏற்­ப­டுத்­துதல், உயர் பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்கள் மற்றும் சுயா­தீன மான நிறு­வ­னங்கள் விட­யத்தில் தேசிய இணக்­கப்­பாடு ஆகிய எல்­லாவற் றிலும் அது கவ­னிக்­கப்­பட வேண்டும்.

பரந்தளவிலான சீர்திருத்தங்கள் ஜனநாயக அரசியல் சூழலிலேயே அதிக சாத்தியமானவை என்பதால், அத்தகைய சீர்திருத்தத்தின் முதல் நடவடிக்கையானது, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்து ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவ தாக அமைய வேண்டும்.

இது, 17 ஆவது திருத்தத்தை உரிய மாற்றங்களுடன் மீளக் கொண்டு வருவதுடன் இணைந்;து முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய இடைவெளி பரந்தளவிலான சீர்திருத்தங்கள் குறித்து தீவிர மாகக் கலந்துரையாட வாய்ப்பளிக்கும். அதற்கு மேல் சீர்திருத்தங்கள் பரந்தளவிலும் ஊக்குவிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவது புதிய அரசியல் இயக்க நிலைமையைப் பொறுத்ததாக அமையும்.

Share.
Leave A Reply