லண்டனில் இருந்து வந்த கணவன் மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி கணனையும் கட்டிப் பிடித்ததால் இருவருக்கும் தீ மூண்டதில் மனைவி பலியாகியுள்ளதுடன்

கணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

01வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்த வெளிநாட்டில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி கணவன் கொழுத்தியுள்ளார்.

இதன் போது மனைவி கணவனை எட்டி கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால் வவுனியா உக்கிளாங்குளத்தைச் சோந்த கஜேந்திரன் சுதாஜினி (வயது 28) என்ற பெண் மரமடைந்துள்ளதுடன் அவரது கணவனான பாலசந்திரன் கஜேந்திரன் (வயது 40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மரணமடைந்த குறித்த பெண்ணின் கணவர் ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதுடன் திருமணம்   செய்து 5 வருடங்கள் ஆகியும் மனைவியை வெளிநாடு கூப்பிடாது தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்தவர் என்றும் தெரியவருகின்றது.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version