புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் தாரா­ள­மாக நாட்­டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியா­பா­ரத்­தையோ மேற்­கொள்­வ­துடன் சுதந்­தி­ரமாக

வாழமுடியும். புலம்பெயர் தமி­ழர்கள் எம்­முடன் இணைந்து வாழவே விரும்­பு­கின்­றனர். அவர்­க­ளது சந்­தே­கத்தைப் போக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

அர­சியலமைப்பில் மாற்­றத்தைக் கொண்­டு­வந்த பின்னர் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பது குறித்து சிந்திக்க முடியும்.19ஆவது அர­சியலமைப்பு திருத்­தத்தை ஏப்ரல் மாதம் சபையில் சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னர் பொது­மக்­களின் கருத்­துக்­களும் எடுக்­கப்­ப­ட­வேண்டும். அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடு­பட்­டாலும்

ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்கும் வகை­யி­லேயே எனது தேர்தல் செயற்­பாடு அமையும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊடக நிறு­வ­னங்­களின் உரி­மை­யா­ளர்கள், மற்றும் பிர­தா­னி­களை நேற்று ஜனா­தி­பதி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­பின்னர் முதன்­மு­றை­யாக ஊடக நிறு­வ­னங்­களின் உரி­மை­யா­ளர்கள், மற்றும் பிர­தா­னி­களை சந்­தித்த அவர் இங்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இந்த கலந்­து­ரை­யா­டலில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:-

ஜனா­தி­பதி தேர்­தலில் நான் பல கட்­சி­களை கூட்­டி­ணைத்து போட்­டி­யிட்டேன். 49 கட்­சிகள் மற்றும் அமைப்­புக்­களின் ஆத­ர­வுடன் இந்த வெற்­றி­யினை நான் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.

தேர்­தலின் போது 100 நாள் திட்­டத்­திற்குள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­யங்கள் தொடர்­பிலும் 100 நாட்­க­ளுக்கு அப்பால் செயற்­ப­டுத்­த­வேண்­டிய வித­ட­யங்கள் குறித்தும் நாம் தெ ளிவாக எடுத்துக்கூறியி­ருந்தோம்.

அதற்­கி­ணங்­கவே தற்­போதும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 1978ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட எமது அர­சியல் யாப்­பி­லுள்ள நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­யினை மக்கள் வெறுக்­கின்­றனர்.

இந்த நிறை­வேற்று ஜனா­தி­பதி அதி­கார முறைமை துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றது. இதனால் தான் அதில் மாற்­றத்தை கொண்­டு­வ­ரவும் 18 ஆவது திருத்­தத்தை இல்­லாது செய்து 19 ஆவது திருத்­தத்தைக் கொண்­டு­வ­ரவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் ஐந்து வரு­டங்­க­ளாக குறைப்பு

19 ஆவது திருத்தச் சட்­டத்தை ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை 5 வரு­டங்­க­ளாக குறைப்­ப­தற்­கான யோச­னை­யினை நானே முன்­வைத்தேன்.

இதேபோல் பாரா­ளு­மன்­றத்தின் ஆயுள் காலத்தை 5 வரு­டங்­க­ளாக குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யினை ஒழிப்­ப­தற்கு நான் விரும்­ப­வில்லை என்ற தோர­ணையில் செய்­திகள் வெ ளியா­கி­யுள்­ளன. இது முற்­று­மு­ழு­தான பொய்­யாகும்.

நான் பொறுப்­பேற்ற விட­யத்­தினை செயற்­ப­டுத்­தியே தீருவேன். அர­சியல் அமைப்பின் திருத்­தத்தை மேற்­கொள்­வ­தற்கு முன்னர் கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்று வரு­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு மத்­தி­யஸ்­த­ராக நான் செயற்­ப­டு­கின்றேன்.

ஜனா­தி­ப­தி­யா­னதன் பின்னர் நான் இந்­தியா, மற்றும் பிரித்­தா­னி­யா­விற்கு உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொண்­டி­ருந்தேன். அத்­துடன் இலங்கை வந்­தி­ருந்த . ஐ.நா.வின் உத­விச்­செ­ய­லாளர் மற்றும் வெ ளிநா­டு­களின் அமைச்­சர்­க­ளையும் நான் சந்­தித்துப் பேசி­யி­ருந்தேன்.

இந்­திய விஜ­யத்தின் போது அந்­நாட்டுப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை சந்­தித்தேன் அதேபோல் பிரித்­தா­னி­யாவின் விஜ­யத்­தின்­போது அந்­நாட்டின் பிர­தமர் டேவிட் கமரூன், எலி­ஸபெத் மகா­ராணி ஆகி­யோ­ரையும் சந்­தித்­தி­ருந்தேன்.

இந்த சந்­திப்­புக்­க­ளி­லி­ருந்து சர்­வ­தேச அளவில் எமது நாடு எவ்­வ­ளவு அழுத்­தங்­களை சந்­தித்து வரு­கின்­றது என்­பதை அறிந்து கொள்ள முடிந்­தது.

இவர்­க­ளு­ட­னான சந்­திப்­புக்­களின் போது புதிய அர­சாங்­கத்தின் மீது அவர்கள் எதிர்­பார்ப்பு வைத்­துள்­ளதை அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

நான் பிரித்­தா­னி­யா­விற்கு சென்­ற­போது அங்கு ஈழம் கோரு­கின்ற புலம் பெயர்ந்த தமி­ழர்கள் 300 பேர­ளவில் ஆர்ப்­பாட்டம் செய்­தனர். அவர்­க­ளுக்கு நான் வாழ்த்­துக்­களை தெரி­வித்தேன்.

இந்த ஆர்ப்­பாட்­டத்தின் பின்னர் என்னை சந்­தித்த எலி­ஸபெத் மகா­ரா­ணியார் இலங்­கையில் புதிய அரசாங்கம் பத­வி­யேற்­றதை ஆர்ப்­பாட்­டத்­தில ஈடு­பட்­ட­வர்கள் அறி­யா­துள்­ளனர் என்று தெரி­வித்தார்.

புலம் பெயர் தமி­ழர்­க­ளுடன் சந்­திப்பு

லண்­டனில் புலம் பெயர்ந்த தமி­ழர்­களின் பல அமைப்­புக்கள் உள்­ளன. நான் இம்­முறை விஜ­யத்தின் போது சில அமைப்­பி­ன­ருடன் பேச்­சுக்­களை நடத்­தினேன்.

ஈழம் கோரும் புலம் பெயர் தமிழர் அமைப்­புக்­க­ளுடன் நான் பேச­வில்லை. அவர்­க­ளுடன் பேச­வேண்­டிய அவ­சி­யமும் எனக்கு இல்லை.

நான் சந்­தித்த புலம் பெயர் தமி­ழர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் சிங்­க­ளத்தில் என்­னுடன் உரை­யா­டினர். எம்மை புலம் பெயர் தமி­ழர்கள் என்று முத்­திரை குத்­த­வேண்டாம்.

நாம் உங்­க­ளுடன் சேர்ந்து செயற்­ப­டு­வ­தற்கு தய­ராக இருக்­கின்றோம். முன்னர் இருந்த இலங்­கையின் தலை­வர்கள் எம்­முடன் பேச­வில்லை.

பிரச்­சி­னை­களை பிரச்­சி­னை­களை பேசித்­தீர்ப்­ப­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். நாட்­டுக்கு வரவும் தயா­ராக உள்­ள­தாக அவர்கள் என்­னிடம் தெரி­வித்­தனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் பிர­த­ம­ரு­டனும் அமைச்­ச­ர­வை­யு­டனும் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றேன். தற்­போது யுத்தம் இல்லை.

குண்டு வெடிப்­புக்­களும் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. ஆனால் இந்த யுத்தம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான விட­யங்­க­ளுக்கு இன்­னமும் தீர்வு காணப்­ப­ட­வில்லை.

யுத்தம் மீண்டும் உரு­வாகும் என்று நான் கோர­வில்லை. ஆனால் இன­வாதம், மத­வா­தங்கள், வள­ரு­மானால் அது நாட்­டுக்கு நல்­ல­தல்ல. நாம் நாட்டின் எதிர்­காலம் கருதி ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வது அவ­சி­ய­மாகும்.

அர­சியல் அமைப்பின் மாற்­றத்தின் பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைப்பு

கேள்வி:- பாரா­ளு­மன்­றத்தை எப்­போது கலைத்து தேர்­தலை நடத்­து­வீர்கள்?

பதில்:– அர­சியல் அமைப்பில் மாற்­றங்­களை செய்­ய­வேண்டும். அர­சியல் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்த முடியும்.

கேள்வி:- நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை மாற்­றி­ய­மைக்கும் 19 ஆவது திருத்தச் சட்­டத்­துடன் தேர்தல் முறையும், மாற்­றப்­ப­ட­வேண்­டு­மென்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி கோரி வரு­கின்­றது. இது குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- இந்த விடயம் தொடர்பில் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்த முடியும் என்று நான் நம்­பு­கின்றேன். அர­சியல் அமைப்பு மாற்­றத்­தினை ஏப்ரல் மாதம் சபையில் சமர்ப்­பிப்போம். அர­சியல் அமைப்பின் மாற்றம் தொடர்பில் பொது­மக்­களின் கருத்­துக்கள் அறி­ய­வேண்­டி­யுள்­ளது. இதற்கு ஆகக்­கு­றைந்­தது இரு வாரங்­க­ளா­வது வழங்­க­வேண்டும் என்­பதே எனது நிலைப்­பா­டாகும்.

கேள்வி:- 19 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி என்­பன ஒரு நிலைப்­பாட்­டையும், ஐக்­கிய தேசி­யக்­கட்சி மாற்று நிலைப்­பாட்­டையும் கொண்­டுள்­ளன. இது தொடர்பில் என்ன கூறு­கின்­றீர்கள்?

பதில்:– பேச்சு மூலம் இணக்­கப்­பாட்­டிற்கு வர­மு­டியும்.

கேள்வி:- கட்சி மாறு­வதை தடுக்கும் வகையில் சட்­ட­மூலம் விரைவில் கொண்­டு­வ­ரப்­ப­டுமா?

பதில்:- கட்சி மாற்­றத்தை சிலர் ஆத­ரிக்­கின்­றனர். சிலர் எதிர்க்­கின்­றனர். இவ்­வி­டயம் குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- புதிய தேர்தல் முறை மாற்­றத்­தினால் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் நிலை காணப்­ப­டு­கின்­றது. சிறு­பான்மை மக்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் தேர்தல் முறை மாற்றம் அமை­யுமா?

பதில்:- தேர்தல் முறை மாற்­றத்தில் சிறு­கட்­சிகள், சிறு­பான்­மை­யி­னக்­கட்­சிகள், பாதிக்­கப்­ப­டா­த­வ­கையில் மாற்­றங்­களை கொண்­டு­வ­ரு­வது குறித்து பேசு­கின்றோம். இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட்ட பின்னர் தான் தேர்தல் முறை மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

கேள்வி:- விரைவில் பொதுத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த தேர்­தலின் போது சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற வகையில் அக்­கட்­சி­யுடன் இணைந்து தேர்தல் பணி­களில் ஈடு­ப­டு­வீர்­களா? அல்­லது இவ்­வி­ட­யத்தில் பொது­நி­லைப்­பாட்டை எடுப்­பீர்­களா?

பதில்:- சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற வகையில் தேர்­த­லின்­போது சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்­பா­கவே தேர்தல் பணி­களில் ஈடு­ப­டுவேன். நான் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக இருக்­கின்­ற­போதும், ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஐக்­கிய தேசி­யக்­கட்சி, சுதந்­தி­ரக்­கட்சி, பொன்­சே­காவின் கட்சி, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, முஸ்லிம் காங்­கிரஸ், ஆகிய கட்­சி­களின் ஆத­ர­வு­ட­னேயே நான் போட்­டி­யிட்டேன்.

ஜே.வி.பி. வௌியி­லி­ருந்து மறை­முக ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது. தேர்­த­லின்­போது கூட நான் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்­தவன் என்றும், சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லா­ள­ரா­கவே போட்­டி­யி­டு­கின்றேன் என்றும் தெரி­வித்­தி­ருந்தேன். தேர்­தலின் பின்னர் பிரச்­சி­னை­யின்றி சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை பதவி எனக்கு கிடைத்­தது. என்­னிடம் அர­சியல் தூர நோக்கு உள்­ளது.

தேர்­த­லின்­போது சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் தேர்தல் பணி­யாற்­றுவேன். ஆனால் இந்தத் தேர்தல் நட­வ­டிக்­கை­யா­னது ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைப்­பதை பாதித்­து­வி­டக்­கூ­டாது. அதற்கு இணங்­கவே நான் எனது பணி­யினை மேற்­கொள்வேன்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின் ஒன்­றி­ணைந்து நாம் தேசிய அர­சாங்கம் அமைக்­க­வேண்டும். இதற்கு ஏற்­ற­வ­கை­யி­லேயே எனது செயற்­பா­டுகள் அமையும். ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து அரை­குறை அமைச்சுப் பத­வி­களை எடுப்­ப­தற்­கா­கவே தேசிய அர­சாங்கம் பற்றி பேசு­வ­தாக சிலர் கூறு­கின்­றனர். தேசிய அர­சாங்­கத்­தினால் பல்­வேறு விட­யங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

ஜெனி­வாவில் மார்ச் மாதம் வெ ளியி­டப்­ப­ட­வி­ருந்த மனித உரிமை பேர­வையின் அறிக்கை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சாங்­கத்தின் கோரிக்­கையை அடுத்து இந்த நிகழ்வு இடம் பெற்றிருக்கின்றது.

இந்த அறிக்கை வெ ளியி­டப்­பட்­டி­ருந்தால் முன்­னைய தலை­வர்கள் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கியிருப்பர். அர­சாங்­கமும் எதிர்க்­கட்­சியும் முரண்­ப­டக்­கூ­டாது. இத்­த­கைய முரண்­பா­டு­களை தவிர்க்­க­வேண்­டு­மானால் தேசிய அர­சாங்­கமே தேவை­யாக உள்­ளது.

நாட்டில் பிர­தான பிரச்­சினை சர்­வ­தேச அழுத்­தத்தை சந்­திக்கும் பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை தீர்ப்­ப­தற்கும் மீண்டும் யுத்தம் ஏற்­ப­டாத நிலையை உரு­வாக்­கு­வ­தற்கும் தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம்.

தேர்­தலின் பின் தேசிய அர­சாங்­கத்­தி­லேயே தீர்வு

கேள்வி:- 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு மோடி வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். வட­மா­காண முத­ல­மைச்­சரும் இதனை கூறி­வ­ரு­கின்றார். ஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியோ காணி, பொலிஸ் அதி­கா­ரி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்ற கொள்கை இருக்­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?

பதில்:- இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி மற்றும் பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­புக்­களின் போது புதிய அர­சாங்­க­மா­னது 100 நாள் வேலைத்திட்டத்திலேயே கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டில் இனங்களுக்கிடையிலான பிரச்சினைக்கு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாகும் தேசிய அரசாங்கத்திலேயே தீர்வு காணப்படும் என்று எடுத்துக்கூறியிருந்தேன். இந்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாராளமாக வரலாம்

கேள்வி:- லண்டனில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்துப் பேசியதாக கூறினீர்கள், அவர்கள் நாட்டுக்குத் திரும்பி முதலீடுகளை மேற்கொள்வதற்கும் ஆர்வமாக உள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்கு வரலாம். அவர்கள் வந்து இங்கு முதலீடுகளையும் வியாபாரங்களையும் மேற்கொள்ளலாம். நாட்டில் சுதந்திரமாக அவர்கள் இருக்கலாம். புலம் பெயர்ந்த தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் நாம் மேற்கொள்வோம். அவர்கள் தமது உரிமைகளைப் பெற்று வாழ நாம் நடவடிக்கை எடுப்போம் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்போம். இவ்வாறான பிரச்சினைகளை வளவிடக்கூடாது.

கேள்வி:- சீனாவின் துறைமுக நகர்த்திட்டம் தொடருமா?

பதில்:- இந்தத் திட்டம் தொடர்பிலான சுற்று சூழல் அறிக்கையினை நாம் கோரியுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்த பின்னர் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version