பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார்.
எனினும், மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நாளையே நாடு திரும்புவார்.
வரும் 30ம் நாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறிசேனவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவரைக் கோடரியால் வெட்டிய நண்பர், காவல்நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
அவரை, நீதிமன்றத்தில் நேற்று நிறுத்திய போது விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.