“கயிற்றின் நுனி வரை சென்று விட்­டாலும் தள­ராமல் அதில் ஒரு முடிச்சை போட்டு இறுக பற்­றிக்­கொள்­ளுங்கள் ஏனெனில் எமக்கு சந்­தர்ப்­பங்கள் பல உள்­ளன” என்று கூறி­யி­ருக்­கிறார் அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி ஆபி­ரகாம் லிங்கன்.

எந்த சந்­தர்ப்­பத்தில் அவர் கூறி­யி­ருக்­கிறார் தெரி­யுமா? தற்­கொலை செய்து கொள்ளும் மன­வோட்­டத்தில் இருப்­ப­வர்­க­ளுக்கே இந்த சிந்­தனை.

தற்­கா­லிக பிரச்­சி­னைக்­கான நிரந்­தரத் தீர்வு தற்­கொ­லை­யா­குமா என்ற கேள்வி தற்­கொ­லை­செய்து கொள்­ப­வர்­க­ளிடம் எழு­வ­தில்லை.

வெளியா­கி­யுள்ள  கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தர பரீட்சை பெறு­பே­று­களை ஆராய முன்னர் சித்­தி­ய­டை­யா­ததால் ஏற்­பட்ட தற்­கொலை சம்­ப­வங்கள் மற்றும் தற்­கொலை முயற்­சிகள் பற்றி ஆராய்ந்து எழுத வேண்­டி­யுள்­ளது.

புஸல்­லாவை இந்து தேசிய கல்­லூ­ரியில் தரம் 12 இல் கல்வி பயின்ற லிதுர்ஸனா மகேஸ்­வரன் என்ற மாணவி பரீட்சை பெறு­பே­றுகள் வெளிவந்த தின­மன்று, தான் கணி­த­பா­டத்தில் சித்தியடையவில்லையே என்ற மன விரக்­தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதா­ர­ண­தரப் பரீட்சை எழு­திய இவர் கணித பாடத்தில் சித்தியெய்­த­வில்லை.

தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கணித பாடத்தை இரண்டாவது தடவை எடுத்து தரு­வ­தாகக் கூறி கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் பயின்று வந்­துள்ளார்.

அதன் படி 2014 ஆம் ஆண்டு பரீட்சை எழு­திய இவர் அதிலும் தனக்கு வெற்றி கிடைக்­க­வில்­லை­யென விரக்தி அடைந்து இவ்வாறு தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.

புஸல்­லா­வைப்­ப­கு­தியில் தொடர்ச்­சி­யாக 7 தற்­கொலை சம்­ப­வங்கள்

பரீட்­சையில் சித்­தி­ய­டை­யாத கார­ணங்கள் மட்­டு­மில்­லாது மேலும் பல கார­ணி­க­ளுக்­காக புஸல்­லாவை பகு­தியில் கடந்த காலங்­களில் தற்­கொலை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

இப்­பி­ர­தே­சத்தில் இரட்­டைப்­பாதை, அட்­ட­பாகை, வகு­கப்­பிட்­டிய, சவுக்­கு­மலை, பிளக்­போரஸ்ட், ரொத்சைல்ட் ,ஆகிய தோட்­டங்­க­ளி­லேயே இவ்­வா­றான தற்­கொலை சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

தற்­கொலை முயற்சி சம்­ப­வங்கள்

இதேவேளை, சாதா­ரண தர பெறு­பே­றுகள் வெளிவந்­த­வுடன் பல இடங்­களில் தற்­கொலை முயற்சி சம்ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

அட்டன் பகுதி பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 மற்றும் 18 வய­து­டைய இரண்டு மாண­விகள் பரீட்சை பெறு­பேறு சிறந்­த­தாக இல்லை என்ற கார­ணத்தால் கால்­ந­டை­க­ளுக்கு வழங்­கப்­படும் ஒரு வகை மருந்தை உட்­கொண்­டுள்­ளனர்.

எனினும் அய­ல­வர்­களால் உட­ன­டி­யாக இவர்கள் டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

இதே வேளை புஸல்­லாவை டெல்டா தோட்­டத்­தைச்­சேர்ந்த ஒரு மாண­வியும் அள­வுக்­க­தி­க­மான மாத்­தி­ரை­களை உட்­கொண்டு தற்­கொ­லை முயற்­சியில் ஈடுபட்டுள்ளார்.

இலங்­கையின் தற்­கொலை விகிதம்

உலக நாடு­க­ளுடன் ஒப்­பிடும் போது இலங்கை தற்­கொலை செய்து கொள்ளும் நாடு­களின் வரி­சையில் பிர­தான இடத்தை வகிப்­பது சற்று அதிர்ச்­சி­யான செய்தி தான்.

இலங்­கையில் வரு­டந்­தோறும் சரா­ச­ரி­யாக நான்­கா­யிரம் பேர் தற்­கொலை செய்து கொள்­கின்­றனர். இது நாௌான்றுக்கு சார­ச­ரி­யாக 11 பேர் என்ற விகி­தத்தில் அமை­கின்­றது.

இதில் பெரும்­பான்­மை­யானோர் 15–-44 வய­துக்­கி­டைப்­பட்­ட­வர்கள். 1950 ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்பின்படி இலங்­கையின் வரு­டாந்த தற்­கொலை விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 6.5 என்ற அளவில் இருந்­தது.

2001 ஆம் ஆண்டு இதுவே 55 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதே வேளை 1996 ஆம் ஆண்டு இலங்­கையில் தற்கொலை செய்து கொண்­ட­வர்­களின் எண்­ணிக்கை 9000 ஆக பதி­வா­கி­யதில் அந்த ஆண்டு அதிக தற்கொலை செய்து கொண்ட  உலக நாடு­களில்  இலங்கை முத­லி­டத்­தைப் ­பி­டித்­ததும் முக்­கிய விடயம்.

2011 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பேருக்கு 16 பேர் என்ற வகையில் தற்­கொலை செய்து கொள்வோர் விகிதம் இருந்­தது. அந்த ஆண்­டி­லி­ருந்து இந்த விகிதம் தொடர்­வது வேத­னைக்­கு­ரி­ய­விடயமே

பாட­சாலை மாண­வர்­களும் ஆற்­றுப்­ப­டுத்தல் (counseling) செயல்­மு­றை­களும்

பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக தற்­கொலை செய்து கொள்­வது அதி­க­ரித்து வந்­தாலும் மலை­ய­கப் ­பெ­ருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் பரீட்சை பெறு­பே­றுகள் மற்றும் வேறு சில கார­ணங்­க­ளுக்­காக மாண­வர்கள் தற்கொலை செய்து கொள்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது.

இந்த சம்­ப­வங்­க­ளுக்­கான அக புறக் கார­ணி­களை ஆராய்ந்து பார்க்க எவரும் ஆர்வம் காட்­டு­வ­தில்லை. பெறு­பே­றுகள் எதிர்­பார்த்­த­வண்ணம் வராத கார­ணத்­தினால் விரக்­தி­ய­டைந்து தற்­கொலை செய்து கொள்ளும்  சம்­ப­வங்கள்   ஒரு புறம் இருக்க குடும்­பத்­தினர், அய­ல­வர்கள்,நண்­பர்­களின் கேலிப்­பேச்­சுக்கு ஆளாகி மன­மு­டைந்து தற்­கொலை செய்து கொள்ளும் சம்­ப­வங்­க­ளையும் இங்கு குறிப்­பிடல் அவ­சியம்.

மேலும் மலை­ய­கத்­தைப் ­பொ­றுத்­த­வரை மாணவர் இடை­வி­லகல், மெல்ல கற்கும் நிலை மற்றும் தற்­கொலை முயற்சி சம்­ப­வங்­க­ளுக்கு குடும்ப மற்றும் சூழல் கார­ணி­க­ளோடு பாட­சா­லைகளும் கூட காரணங்களாக அமைந்துள்ளன.

ஆலோ­சனை வழி­காட்டல் துறையின் தேவையும் தற்­கொ­லையும்

இளம் வய­தி­னரின் தற்­கொலை முயற்­சி­களை குறைப்­ப­தற்­காக முறை­யான வேலைத்­திட்­டத்­தினை பாட­சாலை மட்­டத்தில் இருந்தே ஏற்­ப­டுத்த வேண்டும். தற்­போது நடை­பெற்று வரு­கின்ற தற்­கொலை முயற்­சி­களை அழ­கான முறையில் சம்­பவ ஆய்வின் (Case Study)) ஊடாக மாண­வர்­க­ளுக்கு கொண்டு சென்று தீர்­வினை பெற முயற்­சிக்க வேண்டும்.

பாட­சாலை காலத்தில் ஏற்­ப­டு­கின்ற தற்­கொ­லை­களை குறைப்­ப­தற்­கான முறை­யான ஆலோ­சனை சேவையை அனைத்து ஆசி­ரி­யர்­களும் முன்­னெ­டுக்க வேண்டும். ஆலோ­சனை சேவை என்­பது வெறு­மனே கற்­ற­லுக்கு மாத்­திரம் உரித்­தா­னது அல்ல என்­பது இங்கு முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

மாண­வர்­களின் தற்­கொ­லைக்­கான கார­ணங்கள்.

வீட்டில் ஏற்­படும் விரக்தி
காதல் தோல்வி
பரீட்­சையில் தோல்வி
செய்யக் கூடா­ததை செய்து விடல்
சினிமா தாக்கம்.
நாட­கங்­களின் தாக்கம்
மற்­ற­வர்­களின் தூண்­டு­தல்கள்
மற்­ற­வர்­களின் தேவை­யற்ற நட­வ­டிக்­கைகள்.
பாட­சாலை காலத்தில் ஏற்­படும்

தற்­கொ­லையை குறைப்­ப­தற்­கான வழி­மு­றைகள்

* மாண­வர்­க­ளுக்கு தற்­கொலை கூடா­த­தது என்­பதை வலி­யு­றுத்த வேண்டும்.
* இறப்பு ஒரு முறைதான், போன உயிர் வராது என்­பதை ஏற்­றுக்­கொள்ளச் செய்ய வேண்டும்.
* மாண­வர்­களின் பிரச்­சி­னை­களை ஆசி­ரி­யர்­க­ளிடம் சொல்லப் பழக்­குதல் வேண்டும்.
* ஆசி­ரி­யர்கள், ஆலோ­சனை சேவையை முறை­யாக வழங்க வேண்டும்.
* மாண­வர்­களின் பிரச்­சி­னையை நண்­பர்கள் ஊடாக ஆசி­ரி­யர்­க­ளிடம் சொல்­­வ­தற்கு பழக்­குதல் வேண்டும்.
* ஆசி­ரி­யர்கள் மாண­வர்­களின் விரக்தி நிலையை சுமு­க­மாக நீக்­கு­வ­தற்­கான வழி­மு­றை­களை பின்­பற்ற வேண்டும்.
* பெற்­றோ­ருக்­கான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும்.
* பாட­சா­லை­களின் ஆலோ­சனை சேவையை ஸ்திரப்­ப­டுத்த வேண்டும்.

இன்று மாண­வர்­க­ளுக்கு ஏற்­படும் பிரச்­சி­னையை கவ­னத்திற் கொண்டால், பாட­சா­லை­களில் ஆலோ­சனை சேவை அவ­சியம் என்ற விடயம் வெளிப்­படும்.

ஆசி­ரி­யர்கள் அனை­வரும் அவர்­க­ளது பயிற்சிக் காலத்தில் ஆலோ­சனை வழி­காட்டல் என்னும் பாடத்தை பூர்த்தி செய்­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.

இவர்கள் பெற்றுக் கொண்ட பயிற்­சி­யினை அனு­பவ ரீதி­யா­கவும் தேடல் ரீதி­யா­கவும் மாண­வர்­க­ளிடம் கொண்டு சென்று ஆலோ­சனை வழங்க வேண்டும்.

நடை­மு­றைக்­கேற்ப ஆசி­ரி­யர்கள் மாண­வர்­ களை அணுகி ஆலோ­சனை சேவையை வழங்க வேண்டும். குறிப்­பாக தற்­கொலை முயற்­சிகள் தொடர்­பான விட­யங்­களை அனைத்து ஆசிரியர்களும் தெரிந்து வைத்திருத்தல், தற்கொலை தொடர்பான முடிவினை வைத்திருக்கும் மாணவர்கள் தொடர்பாக தகவல்களை சக நண்பர்களிடம் பெற்று மாணவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்குதல், மாணவர்களிடம் விரக்தி நிலை காணப்படுமாயின் அதற்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்குதல் என்பன முக்கிய விடயங்கள்.

கல்வித் திணைக்கள மட்டத்தில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் மிக முக்கியமானவை.

இவ்வாறு தற்கொலையை குறைப்பதற்கான வேலைத் திட்டத்தை ஆலோசனை வழிகாட்டல் துறையின் ஊடாக தீர்த்து கொள்ள வேண்டும்.

இன்று பாடசாலைகளில் ஆலோ சனை துறையானது வெறுமனே பெயரளவில் மாத்திரம் இருந்து வருகின்றது. அதனை பயனுறுதி வாய்ந்ததாக மாற்ற உரியோர் முன்வரவேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version