எனக்கும், நிரோ­ஷா­வுக்கும் இடையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சியத் தொடர்­புகள் இருந்து வந்தன. நிரோஷா பிய­க­மை­யி­லுள்ள அவ­ளு­டைய கண­வரின் வீட்­டி­லி­ருந்து பிரிந்து வந்து வென்­னப்­பு­வையில் தனி­யாக வாடகை வீடொன்றில் தங்­கி­யி­ருந்தாள்.

அப்­போது நான் அடிக்­கடி அவளைப் பார்க்க அங்கு செல்வேன். நிரோ­ஷாவின் குழந்­தையும் என்னைக் கண்­டதும் “அப்பா, அப்பா” என்று ஒட்­டிக்­கொள்ளும். ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல  நிரோ­ஷாவின்  குழந்­தையைக்  காரணம் காட்டி அவ­ளு­டைய கணவன் அங்கு வந்து செல்­வதை வழக்­க­மாக கொண்­டி­ருந்தார்.

இது எங்கள் இரு­வ­ருக்கும் இடை­யி­லான தொடர்­பினைப் பேணு­வ­தற்கு பெரும் இடை­யூ­றா­க­வி­ருந்­தது. எனவே தான், நான் ஒரு முடி­வெ­டுத்தேன். குழந்­தைக்­காகத் தானே நிரோ­ஷாவின் கணவன் வென்­னப்­புவ வீட்­டுக்கு அடிக்­கடி வந்து செல்­கின்றான். குழந்தை இல்­லை­யென்றால் வர மாட்டான்தானே, என்று குழந்­தையைக் கொன்று விட்டேன்”

இவ்­வாறு சிறு குழந்­தை­யொன்றை ஈவி­ரக்­க­மின்றிக் கொலை செய்து ஆற்றில் வீசி எறிந்த குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் தனது குற்­றத்தை ஒப்­புக்­கொண்டு அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய வரும் தக­வல்­களின் அடிப்­ப­டையில், நிரோஷா மது­மாலி பிய­கமையில் அரச நிறு­வ­ன­மொன்றில் உத­விக்­க­ணக்­கா­ள­ராகப் பணி­பு­ரிந்து வந்த நிலையில்தான் பந்­துல  என்­ப­வரைக்  காத­லித்து திரு­மணம் பந்­தத்தில் இணைந்தாள்.

பந்­து­லவும் அர­சாங்க திணைக்­க­ள­மொன்றில் தொழில் புரி­பவர். எனவே இரு­வரும் சேர்ந்து பிய­கமை பகு­தி­யி­லேயே வீடொன்­றையும் வாங்கி தமது திரு­மண வாழ்க்­கையை ஆரம்­பித்தார்கள். அதன்பின் இரு­வ­ருக்கும் இடை­யி­லான அன்பின் அடை­யா­ள­மாக நிரோஷா அழ­கிய ஆண் குழந்­தை­யொன்றைப் பெற்­றெ­டுத்தாள்.

நிரோ­ஷாவின் கணவர் பந்­துல, நிரோஷா மீதும் அவ­ளது குழந்தை மீதும் அள­வு­க­டந்த பாசத்தை வைத்­தி­ருந்தான். அதுவும் குழந்­தையை ஒரு நாளும் அவனால் பிரிந்­தி­ருக்க முடி­யாது.

இந்த நிலையில் நிரோ­ஷா­வி­னதும், பந்­து­ல­வி­னதும் திரு­மண வாழ்க்கை மூன்று வரு­டங்­க­ளாக எந்­த­வித பிரச்­சி­னையும் இல்­லாமல் நகர்ந்­தது. ஆயினும் விதி யாரை விட்­டது. விதியின் விளை­யாட்டில் நிரோ­ஷா­வி­னதும் பந்­து­ல­வி­னதும் குடும்ப வாழ்க்கை சின்­னா­பின்­ன­மாகச் சிதற ஆரம்­பித்­தது.

நிரோஷா அரச நிறு­வ­ன­மொன்றில் தொழில் புரிந்து வந்த காலத்தில் 24 வய­தான துமிந்த (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) என்­ப­வனின் அறி­முகம் கிடைக்­கப்­பெற்­றது. துமிந்த லொறி­ச் சாரதியாகப் பணி­பு­ரி­பவன்.

எனவே தனது தொழில் நிமித்தம் உறு­திப்­பத்­தி­ர­மொன்றைப் பெற்று கொள்ளும் முக­மாக நிரோஷா பணி­பு­ரிந்த குறித்த நிறு­வ­னத்­துக்கு முதல் முதலில் வந்­தி­ருந்தான். இதன் போதே நிரோஷா­வுக்கு  துமிந்­தவின் அறி­முகம்  கிடைக்­கப்­பெற்­றது. துமிந்­த­வுக்கு வேண்­டிய சகல உத­வி­க­ளையும் நிரோ­ஷாவே செய்­து­கொ­டுத்தாள்.

ஒரு­வாறு துமிந்­த­வுக்கு வேண்­டிய உறு­திப்­பத்­திரம் நிரோஷா மூலம் கிடைக்கப் பெற்­றது. ஆயினும், அதன்­பின்பும் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான உறவு தொடர்ந்­தது. ஆரம்­பத்தில் நல்ல நண்பர்­களாய் தமது உற­வினை ஆரம்­பித்­தார்கள்.

எனினும், நாட்கள் செல்லச் செல்ல நட்பு என்னும் திரை மெல்ல மெல்ல விலகி இரு­வ­ருக்­குள்ளும் மிக நெருங்­கிய தொடர்­பு­கள் ஏற்­ப­ட்டன. நிரோஷா தனது கண­வ­ருக்குத் தெரி­யாமல் துமிந்­த­வுடன் தனது இர­க­சிய தொடர்­பு­களைப் பேணி வந்தாள்.

எனினும் வெகு நாட்கள் செல்லும் முன்­னரே நிரோ­ஷாவின் கணவர் பந்­து­ல­வுக்கு இது எப்­ப­டியோ தெரி­ய­வந்­தது. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த பந்­துல தொடர்ந்து நிரோ­ஷா­வுடன் முரண்­பட ஆரம்­பித்தார்.

நிரோ­ஷாவின் கணவர் நிரோ­ஷாவை வேலைக்குச் செல்­லாது வீட்­டி­லி­ருந்து குழந்­தையைப் பார்த்­துக்­கொள்­ளு­மாறு கூறினார். ஆயினும் நிரோஷா அதற்கு உடன்­ப­ட­வில்லை. இதனால் இரு­வ­ருக்­கு­மி­டையில் தொடர்ந்து பிரச்­சி­னைகள் மூண்ட வண்­ணமே இருந்­தன. இறு­தியில் பந்­து­லவை விட்டுப் பிரிந்து வாழ முடி­வெ­டுத்த நிரோஷா அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்தாள்.

அதன்­படி வென்­னப்­புவை பகு­தி­யி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் அலு­வ­லக உதவிக் கணக்­கா­ள­ராக வேலைக்கு சேர்ந்­த­துடன், மூன்று வயதுக் குழந்­தை­யையும் அழைத்துக் கொண்டு வென்னப்­புவை பகு­தியில் வாட­கைக்கு வீடொன்­றையும் பெற்றுக் குடி­யே­றினாள்.

அதன்பின் வென்­னப்­புவை பிர­தே­சத்­தி­லுள்ள சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் தனது மூன்று வயது மகனை காலையில் கொண்டு போய் விட்டு விட்டு வேலைக்குச் செல்­வதும், பின் வேலை விட்டு வீட்டுக்கு செல்லும் போது மீண்டும் குழந்­தையை கூட்டிச் செல்­வ­தையும் வழக்­க­மாகக் கொண்டிருந்தாள்.

அது­மட்­டு­மின்றி, நிரோ­ஷாவின் தனி­மையை தனக்கு சாத­க­மாக்கிக் கொண்டான் துமிந்த. அடிக்­கடி நிரோ­ஷாவைச் சந்­திப்­ப­தற்­காக நிரோஷா தங்­கி­யி­ருந்த வீட்­டிற்கு வந்து செல்­வதை வழக்­க­மாக கொண்­டி­ருந்தான்.

இதனால் இப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்த பலரும் துமிந்த தான் நிரோ­ஷாவின் கணவர் என்று நம்பத் தொடங்­கினர். அது­மட்­டு­மின்றி நிரோ­ஷாவின் மகனும் துமிந்­தவை “அப்பா” என்றே அன்­பாக அழைத்தான்.

துமிந்­தவும் பல சம­யங்­களில் ஒரு தந்தை போலவே நிரோ­ஷாவின் மக­னிடம் நடந்­து­கொண்டான். இதற்கு இடையில் நிரோ­ஷாவின் சட்­ட­ரீ­தி­யான கணவன் பந்­து­லவும் குழந்­தையைப் பார்ப்பதற்காகவும், நிரோ­ஷாவை எப்­ப­டி­யா­வது சமா­தா­னப்­ப­டுத்தி தன்­னுடன் கூட்டிச் செல்லும் நோக்கு­டனும் அடிக்­கடி அங்கு வந்து சென்றான்.

எனினும் பந்­துல பல­முறை தன்­னு­டைய முயற்­சியில் தோற்றான். இருப்­பினும் குழந்­தையைப் பார்ப்­ப­தற்­காக நிரோ­ஷாவின் வீட்­டுக்கு வரு­வதை மட்டும் தவிர்த்­துக்­கொள்­ள­வில்லை.

இவ்­வாறு பெரி­ய­வர்­க­ளுக்கு இடையில் நடை­பெறும் எது­வுமே அந்த பிஞ்சுக் குழந்தை அறியாதிருந்­தது. அது கள்ளங் கப­ட­மற்ற தன்­னு­டைய சிரிப்­பினால் இருவர் இடத்­திலும் தன்­னு­டைய அன்பு மழையைப் பொழிந்­தது. ஆயினும் துமிந்த அந்த பிஞ்­சுக்­கு­ழந்­தைக்கு இய­ம­னாக மாறினான்.

ஒரு நாள் துமிந்த  நிரோ­ஷாவின் வீட்­டுக்கு சென்ற போது நிரோ­ஷாவின் வீட்டில் அவ­ளு­டைய கணவர் பந்­துல குழந்­தையை பார்ப்­ப­தற்­காக வந்­தி­ருந்­த­மையால் நிரோஷா துமிந்த எவ்வளவு தட்­டியும் கதவைத் திறக்­க­வில்லை.

இதனால் பெரும் ஆத்­தி­ர­ம­டைந்த துமிந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அப்­போது நிரோஷா தகாத வார்த்­தை­களால் துமிந்­தவை திட்டித் தீர்த்தாள் இதன்­போது ” நீ இனி இந்த பக்­கமே வராதே, எதற்­காக இங்கு வரு­கின்றாய்” என்று எல்லாம் திட்டி தீர்த்தாள்.

இதனால் பெரும் மனம் குழப்­ப­டைந்­தவன் நிரோ­ஷா­வுக்கும் தனக்­கு­மி­டை­யி­லான உற­வினைத் தொடர்ந்து பேணி­வ­ரு­வ­தற்கு நிரோ­ஷாவின் குழந்தை தானே இடை­யூ­றாக இருக்­கின்­றது.

குழந்­தையைப் பார்ப்­ப­தற்­காக தானே அவ­ளு­டைய கணவர் அடிக்­கடி நிரோ­ஷாவின் வீட்­டுக்கு வரு­கின்றான். குழந்­தையைக் கொன்­று­விட்டால் பந்­துல வரப் போவ­தில்லை என்று முட்டாள்த்­த­ன­மாக எண்­ணினான். அதன்­படி குழந்­தையை கொல்­வ­தற்­கான திட்­ட­மொன்றை தீட்­டினான்.

அந்த திட்­டத்­தின்­படி, அன்று வழ­மைபோல் நிரோஷா தனது குழந்­தையை சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றாள்.

அதன்பின் அன்று பிற்­பகல் 12.00 மணியளவில் அங்கு சென்ற துமிந்த, குழந்­தையை அழைத்துக் கொண்டு செல்­கின்றேன் என்று சிறுவர் பரா­ம­ரிப்பு நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கூறி­விட்டு குழந்­தையை தன்­னுடன் அழைத்துக் கொண்டு சென்றான்.

சிறுவர் பரா­ம­ரிப்பு நிலைய பொறுப்­ப­தி­கா­ரியும் நிரோ­ஷாவின் கணவர் என்று துமிந்­தவை நினைத்­தி­ருந்­த­ப­டியால் எவ்­வித மறுப்பும் தெரி­விக்­காமல் துமிந்­த­வுடன் குழந்­தையை அனுப்­பினார்.

அதன்பின் மீண்டும் அலு­வ­லக வேலை­யி­லி­ருந்து நிரோஷா குழந்­தையைக் கூட்டிச் செல்­தற்­காக சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­துக்கு வந்த போது, வழ­மை­யாக தூரத்தில் கண்­ட­வுடன் ” அம்மா ” என்று பெயர் சொல்லி அழைத்­த­வாறே முற்­றத்­துக்கு ஓடி வரும் குழந்தை அன்று வர­வில்லை.

தொடர்ந்து சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­துக்குள் நுழைந்த போது அங்கு பணி­பு­ரியும் பெண்­மணி ” உங்­க­ளு­டைய கணவர் வந்து குழந்­தையை அழைத்துச் சென்­று­விட்டார்” என்று கூறியுள்ளார். எனினும் நிரோ­ஷா­வுக்கு மன­துக்குள் ஒரு­வித சந்­தே­கத்தை இது ஏற்­ப­டுத்­தி­யது.

தன்­னு­டைய கணவர் ஒரு நாளும் குழந்­தையைப் பார்ப்­ப­தற்கு சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­துக்கு வந்­தது கிடை­யாது.

அப்­ப­டி­யி­ருக்­கையில் இன்று எப்­படி இங்கு வந்தார் என்ற சந்­தே­கத்தை நீக்­கு­வ­தற்கு அவ­ளு­டைய கணவ­ருக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி ” குழந்­தையை சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தி­லி­ருந்து அழைத்து சென்­றது நீங்­களா” என்று கேட்டாள்.

இருப்­பினும் பந்­து­லவோ “நான் அழைத்துச் செல்­ல­வில்லை ஏன் குழந்­தைக்கு என்ன நடந்­தது?” “என்று பெரும் பதற்­றத்­துடன் கேட்டார்.

அதன்பின் துமிந்­த­வுக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி “குழந்­தையை சிறுவர் பாரா­ம­ரிப்பு நிலை­யத்­தி­லி­ருந்து அழைத்துச் சென்­றது நீயா ? ” என்று கேட்ட போது அவனோ “இல்லை, நான் அழைத்து செல்­ல­வில்லை” என்று கூறி­விட்டு விரை­வாக அவ­ளு­டைய அழைப்பை துண்­டித்தான்.

நிரோ­ஷா­வுக்கு என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை. என்ன தான் நிரோஷா வழி தவறிச் சென்றிருந்தாலும் குழந்தை பெற்­றவள் என்­பதால் அவள் மனம் பதற ஆரம்­பித்­தது. என்ன செய்­வ­தென்று அறி­யாத நிலையில் அழுது புலம்­பினாள்.

ஆயினும், பந்­துல குழந்­தையைக் காண­வில்லை என்றும் , தனக்கு துமிந்த மீது சந்­தேகம் இருப்­ப­தா­கவும் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்­றினைப் பதிவு செய்தான்.

அதன்­படி சந்­தே­கத்தின் பேரில் துமிந்­தவை வென்­னப்­புவ பொலிஸார் கைது செய்து விசா­ரித்த போது குழந்­தையை சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தி­லி­ருந்து தானே அழைத்து சென்­ற­தா­கவும், குழந்­தையை நயி­னா­ம­டுவ பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் வைத்­தி­ருப்­ப­தா­கவும் கூறினான்.

அதன்பின் வென்­னப்­புவ குற்­றப்­பி­ரிவைச் சேர்ந்த பொலிஸ் அதி­கா­ரி­களைக் கொண்ட விசேட குழு­வொன்று துமிந்­த­வையும் அழைத்துக் கொண்டு அந்த பிஞ்சுக் குழந்­தையை தேடி தனது பய­ணத்தைத் தொடங்­கி­யது.

kulanthai-2

எனினும் பொலிஸ் ஜீப் வண்­டியில் செல்லும் போதே துமிந்த தான் இந்த பிஞ்சுக் குழந்­தையின் வாயில் துணி­களை திணித்துக் கொலை செய்து ‘கிங் ஒயா’வில் வீசி­ய­தா­கவும் தெரி­வித்தான்.

இதனைத் தொடர்ந்து ‘கிங் ஒயா’ ஆற்றில் இருந்து அந்த பிஞ்சுக் குழந்தை சட­ல­மாக மீட்டெடுக்கப்பட்டது. பல்­வேறு குற்றச் செயல்­களைப் பார்த்து பக்­கு­வப்­பட்­டி­ருந்த பொலி­ஸா­ருக்கு கூட ஒரு நிமிடம் கண்­களை கலங்கச் செய்­தது அந்த காட்சி. அனை­வ­ருமே அதிர்ச்­சியில் உறைந்து போனார்கள்.

இது தொடர்­பாக, சந்­தேக நப­ரான துமிந்த வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தினை முழு­மை­யாக நோக்­கு­மி­டத்து,

எனக்கும் நிரோ­ஷா­வுக்கும் இடையில் மிக நீண்ட கால­மாக இர­க­சிய தொடர்­புகள் இருந்து வந்­தன. அதுவும் அவள் கண­வ­ருடன் கோபித்துக் கொண்டு தனி­யாக வாடகை வீடொன்றில் தங்­கி­யி­ருந்­தது, எனக்கு இன்னும் வச­தி­யா­க­வி­ருந்­தது.

நான் அடிக்­கடி அவளைச் சந்­திப்­ப­தற்­காக அங்கு வந்து செல்வேன். அவ­ளு­டைய குழந்­தையும் என்னை அவ­னு­டைய தந்தை என்று நினைத்து ‘அப்பா’ என்று அன்­பாகக் கூப்­பிடும். ஆயினும் எங்கள் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான உற­வுக்கு இடைஞ்­ச­லாக அடிக்­கடி குழந்­தையைக் காரணம் காட்டி நிரோ­ஷாவின் கண­வனும் அங்கு வந்து சென்றான். அது எனக்குப் பிடிக்­க­வில்லை.

ஒரு நாள் நான் நிரோ­ஷாவின் வீட்­டுக்குச் சென்ற போது முன்­க­தவு மூடி­யி­ருந்­தது. நான் பலத்த குரலில் நிரோ­ஷாவின் பெயர் சொல்லி அழைத்தேன்.

எனினும் அவள் திறக்­க­வில்லை. நான் கதவை உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்றேன். அங்கு அவ­ளு­டைய கணவன் குழந்­தையைப் பார்ப்­ப­தற்­காக வந்­தி­ருந்தான்.

அது­மட்­டு­மின்றி நிரோஷா என்னைப் பார்த்து மறு­ப­டியும் இங்கு வராதே எனக் கத்­தினாள். என்னை அங்­கி­ருந்து ஒரு நாயை விரட்­டு­வது போல் விரட்­டினாள். நான் அதற்கு மேல் அங்­கி­ருக்கப் பிடிக்­காமல் அங்­கி­ருந்து சென்றேன்.

எனவே நிரோ­ஷாவின் கணவன் அவ­ளது குழந்­தையைப் பார்ப்­ப­தற்­காக தானே அடிக்­கடி வரு­கின்றான். இதனால் தானே நிரோஷா என்னை விரட்டி விட்டாள் என்று எண்­ணினேன்.

அந்தக் குழந்­தையால் இனி எனக்கு நிரோ­ஷாவைப் பார்க்க முடி­யாது என்று எண்­ணினேன். இதனால் எனக்கு அந்த குழந்தை மீது வெறுப்பு உண்­டா­கி­யது. எனவே தான் குழந்­தையை ஒழித்துக் கட்ட வேண்டும் என நினைத்தேன்.

அதன்­படி நிரோஷா குழந்­தையை விட்டுச் செல்லும் சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­துக்குச் சென்றேன். என்னைக் கண்­டதும் குழந்தை ‘அப்பா’ என்று கூப்­பிட்­ட­வாறே சிரித்துக் கொண்டு முற்­றத்­துக்கு ஒடி­வந்தது.

நிரோ­ஷாவின் சட்­ட­ரீ­தி­யான கண­வனைப் போல் சிறுவர் பரா­ம­ரிப்பு நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் நான் நடந்து கொண்டேன். அவர்­களும் நம்­பி­விட்­டார்கள்.

இதனால் குழந்­தையை என்­னுடன் அழைத்து செல்லப் போகின்றேன் என்­றதும் உடனே அனுமதி வழங்கிவிட்டார்கள்.

எனவே அதன்பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பஸ்லில் ஏறி நயினாமடு கிங் ஓயா அருகில் இறங்கினேன்.

அங்கு நிலத்தில் துணித்துண்டு ஒன்று கிடந்தது. அதனையும் கையோடு எடுத்துக் கொண்டு பாலத்திற்கு அருகில் சென்றேன். அங்கு சன நடமாட்டம் பெரிதாக இருக்கவில்லை. அப்போது நான் அக்குழந்தையின் வாய்க் குள் துணித்துண்டைத் திணித்தேன்.

சிறிது நேரத்துக்குள் குழந்தை மூச்சுத் திணறி விட் டது. உடனே யாரும் வருகின்றார்களா? என்று சுற்றிப் பார்த்து விட்டு பாலத்திற்கு மேலே சென்று குழந்தையை ஆற்றிற்குள் வீசினேன்.

பின் நான் அங்கிருந்து விரை வாக பஸ்லில் ஏறி வீடு சென்றேன்.” என தனது வாக்குமூலத்தில் சந்தேக நபரான துமிந்த தெரிவித்திருந்தான்.

இதனை தொடர்ந்து துமிந்த தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான். எது எவ்வாறாயினும், திருமணமாகி கணவன், குழந்தைகள் என்று வந்த பின் தவறான உறவு முறைகள் ஆபத்தானது என்பதற்கு மேற்படி சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு வகையில் இவ் வாறான இரகசியத் தொடர்புகளினால் இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிக் குழந்தைகள் தான்.

– வசந்தா அருள்ரட்ணம்

Share.
Leave A Reply

Exit mobile version