மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1.00மணியளவில் குறித்த குடும்பம் வசித்த வீட்டை தாக்கியபோது வீடு உடைந்த நிலையில் அதனுள் இருந்த மனைவி உயிரிழந்துள்ளார்.

இதன்போது யானையின் தாக்குதலில் இருந்து தப்ப முனைந்த கணவரும் யானையின் தாக்குதலினால் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூதுரை பிறப்பிடமாகவும் நெல்லிக்காடை வசிப்பிடமாக கொண்ட எஸ்.மோகனதாஸ்(30வயது) அவரது மனைவியான நெல்லிக்காட்டை சேர்ந்த எம்.சுயமலர்(17வயது)ஆகியோருமே யானையின் தாக்குதலில் உயிரிழந்ததாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

IMG_0037-copy-e1445320409710 copie

இவர்கள் இருவரும் திருமணமாகி சுமார் 10 மாதங்களாக குடிசையில் வசித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version