தனது இரண்டாவது பிள்ளை தனது காதலனுக்கு பிறந்ததாகவும் , அவரில்லாமல் தன்னால் வாழமுடியாதெனவும், இரண்டு பிள்ளைகளின் தாயாரொருவர் பொலிஸில் வைத்து கணவனை நிராகரித்த சம்பவமொன்று தலாது ஓய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் முடித்துள்ளார். பின்னர் கணவனின் உறவினருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் கணவனின் பொலிஸ் முறைப்பாட்டையடுத்து பூதாகரமாகியுள்ளது.

பின்னர் பொலிஸிற்கு வந்த பெண் தனது இரண்டாவது பிள்ளையின் தந்தை , தனது காதலன் எனவும் அவரின்றி வாழமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் காதலனின் பெற்றோர் இதனை பொய்யெனக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



பெரிய தந்தையுடன் காதல் தொடர்பில் யுவதி: ஊர் மக்கள் பொலிஸிற்கு முறைப்பாடு

2486-love-despite-age-gap773363619

தாயின், சகோதரியின் 50 வயதான கணவருடன் , 17 வயதான யுவதியொருவர் காதல் தொடர்பைப் பேணிய அதிர்ச்சிகர சம்பவமொன்று கினிகத்தேனையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி கர்ப்பமாக இருப்பதாகவும் , அது தொடர்பான பரிசோதனைகளுக்காக அவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளின் பொருட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் பெரியம்மா தற்போது உயிருடன் இல்லையெனவும் , அவரின் வீட்டிலேயே குறித்த யுவதி வளர்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாக அவரது பெரிய தந்தை தெரிவித்துள்ளதுடன் , அவ் யுவதியும் அதையே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் , பொலிஸாருக்கு அறியத்தந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , யுவதி பராமரிப்பு இல்லமொன்றின் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version