ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் ஒன்றாக பணியாற்றி வந்த 10 பொலிஸ் அதிகாரிகளுக்கும் மயக்க மருந்து கொடுத்து விட்டு அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் சக பொலிஸ் அதிகாரி ஒருவர்.

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள சினார்டோ நகரில் எல்லைப் புற சோதனைச் சாவடி உள்ளது. இங்கு 11 பொலிஸ்காரர்கள் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் நேற்று தன்னுடன் பணியில் இருந்த சக பொலிஸ்காரர்கள் அனைவருக்கும் மயக்க மருந்து கொடுத்து அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தபோது துப்பாக்கியால் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளினார்.

இதில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ்காரர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ்காரர் தலீபான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

இவர், பொலிஸ் பணியில் இணைந்து தலிபான்களுக்கு இரகசியமாக உதவி செய்து வந்துள்ளார். பொலிஸ்காரர்களை கொன்றுவிட்டு தப்பிச் சென்றவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version