முள்ளிபுரம் – புத்தளம் பகுதியை நோக்கி சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், 74 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.