உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் இதுவரை 18 லட்சத்து 41 ஆயிரத்து 123 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 479 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 21,816
ஸ்பெயின் – 16,972
இத்தாலி – 19,899
பிரான்ஸ் – 14,393
ஜெர்மனி – 2,961
இங்கிலாந்து – 10,612
சீனா – 3,339
ஈரான் – 4,474
துருக்கி – 1,198
பெல்ஜியம் – 3,600
நெதர்லாந்து – 2,737
சுவிஸ்சர்லாந்து – 1,106
பிரேசில் – 1,114

Share.
Leave A Reply

Exit mobile version