ilakkiyainfo

கொரோனா வைரஸ் :  யாழ்ப்பாணம் தாவடிக் கிராமம் விடுவிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் முதல் நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அவருடைய கிராமமான தாவடி பகுதி முற்றாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (13.04.2020) காலை விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த வேறு எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் தாவடிக் கிராமத்தினை சூழ ஏற்படுத்தபட்டிருந்த தற்காலிக தடைகள் தளர்தப்பட்டு அந்தக் கிராமம் அபய வயலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

தாவடியில் 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version