இந்தியாவில் ஆந்திரா பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இரசாயக வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தின் அருகிலுள்ள கிராமத்தில் இரசாயன எரிவாயு தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிவாயு கசிவு ஏற்பட்ட பகுதியில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாகப்பட்டின மாநகராட்சி தெரிவித்துள்ளது.