நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம்  புதிய கொரோனா தொற்றாளர்களாக 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 28 புதிய தொற்றாளர்களும் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 569 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 442 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

135 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version