யாழ். கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்து விட்டு ஏழரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் வயோதிபத் தம்பதி வசித்துவரும் நிலையில், கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த குழுவினர், அவர்கள் இருவரையும் மிரட்டி கட்டிவைத்து விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version