திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு சந்திப்பகுதியில் இன்று (24.06.2020) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பிரதேசத்தில் இருந்து கிளிவெட்டி நோக்கி சென்ற அம்பியூலன்ஸ் வண்டியும் தோப்பூர் பிரதேசத்தில் இருந்து மூதூர் பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.