துபாயில் இருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (வெள்ளிக்கிழமை) இன்று மாலை கேரளாவின் கோழிக்கோட்டில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று இரவு 7:38 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை வெளியான தகவலின் படி விமானி ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.