Site icon ilakkiyainfo

20 ஆவது திருத்தத்தில் துணை பிரதமராக மைத்திரியை நியமிக்க தீர்மானமா?

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 20 ஆவது திருத்தத்தில் துணைப் பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனனிடம் ஒப்படைக்க அக்கட்சி அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

18 மற்றும் 19 ஆவது திருத்தங்களை ரத்து செய்ய முற்படும் போது, 20 ஆவது திருத்தத்தின் கீழ் ஒரு பகுதியாக இந்த பிரேரணை சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த முன்மொழிவுக்கு அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்

Exit mobile version