நாட்டில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 489 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 23 ஆயிரத்து 793 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 833 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் மரணமடைந்துள்ளனர்.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 62 வயது பெண், வத்தளை பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் மற்றும் மாத்தளையை சேர்ந்த 76 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version