உசிலம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

“மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே ரத்தக்கறையுடன் கிடந்த துணியை நாய்கள் கடித்து குதறின. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்து வந்த உசிலம்பட்டி டவுன் போலீசார் ரத்தக் கறையுடன் கிடந்த துணியை பிரித்து பார்த்தனர். அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் நாய்கள் கடித்துக் குதறியதில், சிதைந்த நிலையில் இருந்தது.

போலீசார் அந்த குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதாடர்பாக வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

வீசிச் சென்றது யார்? குழந்தையின் உடல் பெரும்பாலும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா? என கண்டறிய முடியவில்லை.

உயிருடன் இருந்த குழந்தையை வீசிச் சென்றார்களா அல்லதுஇறந்த குழந்தையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version