4 கோடி ரூபா பெறுமதியான தங்கப் பாலங்களுடன் இலங்கையர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இன்று காலை டுபாயிலிருந்து வந்த விமானம் மூலமே குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.

இவரிடம் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 16 தங்க பாலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கபாலங்களின் பெறுமதி 4 கோடியே 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

கைதுசெய்யப்பட்ட நபரிடம் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version