யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version