யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை காவல்நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் காவல்துறை உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

74

Share.
Leave A Reply

Exit mobile version