முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டுக் கூரையின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை 1ம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் அதிகாலை வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரம் முறித்து விழுந்துள்ளது.

அதனையடுத்து வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தின்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.

Share.
Leave A Reply

Exit mobile version