இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்திருப்பதாக, நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார் என்று, வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சட்டத்தை ரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொலிஸார் இந்த சட்டத்தை தவறாகவே பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து பேசுகையில் அமைச்சர் சுனில் வடகல இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே, சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வோம் என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version