திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நால்ரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ள ஒருவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த சம்பவம் வியாழக்கிழமை (30) மாலை இடம் பெற்றுள்ளது. காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் மூவரும் திருகோணமலை துறைமுக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சீனக்குடா பகுதியை சேர்ந்த நான்கு நண்பர்கள் திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போய் உள்ள 20 வயதான ஒருவரை தேடும் பணியை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் திருகோணமலை -சீனக்குடா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் 20வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் எனவும் தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version