ஹமாஸ் அமைப்பு தன்னிடம் பணயக்கைதிகளாகயிருந்தவேளை உயிரிழந்த நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.
உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்துள்ளமை இதுவே முதல்தடவை.
செஞ்சிலுவை சங்கம் தற்போது அந்த உடல்களை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றது.