வவுனியா பூந்தோட்டம் வீதியில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய நிலையில் தீப்பற்றி முழுமையாக எரிந்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம் பெற்றுள்ளது.
வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது.
இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு குழுமிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து தெரிந்துள்ளதுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.