யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன், ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை உட்கொண்ட மற்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version