இந்தோனேசியாவிலும் இன்று (30) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.4-ஆக பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version