அக்பர்புர பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு பேருந்தும் ராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லையில் இருந்து வந்த பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த இராணுவ லொரி மீது மோதியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்பர்புர பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.