லக்னோவில், பெண் ஒருவர் பைக்கில் சென்ற கணவனை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதத்தை தூண்டியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் பைக்கில் சென்ற இளைஞனை செருப்பால் அடிப்பதை காணலாம்.

அதில் ஒரு இளைஞன் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தார், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பெண் அந்த இளைஞனை செருப்பால் அடிக்கிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து விவாதத்தை தூண்டியுள்ளது, இந்த சம்பவம் குர்ராம் நகர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.

வைரலாகும் வீடியோவில், கோபத்தில் இருக்கும் அந்தப் பெண் இளைஞனை செருப்பால் அடிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இருப்பினும் இந்த நேரத்தில் இளைஞன் பைக்கை ஓட்டுவதில் மும்முரமாக இருக்கிறார். இந்த வீடியோவை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. 21 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், அந்த இளைஞர் பல முறை செருப்பால் அடிக்கப்படுவதை காணலாம்.

இந்த வீடியோ தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான எதிர்வினைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சிலர் இதை வேடிக்கையாகக் கருத்து தெரிவித்துள்ளனர், மற்றவர்கள் பொது இடத்தில் இந்த நடத்தையைக் கண்டித்துள்ளனர்.

இந்த வீடியோவானது X இல் Ghar Ke Kalesh என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. அதில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கணவன் மற்றும் மனைவி பைக்கில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவி தன் கணவனை செருப்பால் அடிக்க ஆரம்பித்தார் என்ற கேப்ஷன் உடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டது.

இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த வீடியோ ஆன்லைனில் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். பலர் வன்முறையைப் பப்ளிக் ஆக வெளிப்படுத்துவதைக் கண்டித்துள்ளனர், சிலர் இது விபத்துக்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version